Tuesday, March 19, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புகால்நடை மருத்துவர் பணியிடங்கள்; வெளிவந்த அறிவிப்பு..

    கால்நடை மருத்துவர் பணியிடங்கள்; வெளிவந்த அறிவிப்பு..

    தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் கால்நடை மருத்துவர் பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

    தமிழகத்தில் காலியாக உள்ள 731 கால்நடை மருத்துவர் பணியிடங்களை நிரப்பக்கோரி பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் தற்றபோது கால்நடை மருத்துவர் பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

    அதன்படி, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 15-ஆம் தேதியன்று காலை, மதியம் என இருவேளைகளிலும் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தேர்வுக்கான விண்ணப்பங்கள் வருகிற டிசம்பர் மாதம் 17-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும், இந்த விண்ணப்பங்களை  ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பிறகு திருத்தங்களை மேற்கொள்ள 22.12.2022 முதல் 24.12.2022 வரை அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதைச்சார்ந்த தகவல்களை மேலும் அறிய https://tnpsc.gov.in/english/notification.aspx என்ற இணையதளத்தை அனுகலாம். 

    சென்னை பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் குளறுபடி: அரசு ஆணையை வெளியிட்டது தமிழக அரசு…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....