Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்சென்னை பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் குளறுபடி: அரசு ஆணையை வெளியிட்டது தமிழக அரசு...

    சென்னை பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் குளறுபடி: அரசு ஆணையை வெளியிட்டது தமிழக அரசு…

    சென்னை பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் குளறுபடி, விசாரணைக் குழு அமைத்து அரசு ஆணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

    சென்னை பல்கலைக்கழகத்தில் கலை மற்றும் கல்லூரிகளில் இளங்கலை பயிலும் மாணவர்களுக்கு பருவத் தேர்வுகள் அறிவியல் நடைபெறுதல் – 18.11.2022 அன்று நடைபெறவிருந்த மூன்றாம் பருவத் தேர்வில் பொதுத்தமிழ் – 111 பாடத்திற்கான வினாத்தாள் மாறிய விவகாரம், விசாரணைக் குழு அமைத்தும், இரண்டு மாதத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு அரசு ஆணையை
    வெளியிட்டுள்ளது.

    சென்னை பல்கலைக்கழகத்துடன் இணைவுப்பெற்ற கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பருவத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் இளங்கலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு மூன்றாவது பருவ தேர்வில் பொதுத்தமிழ் 18.11.2022 அன்று நடைபெற இருந்தது. அத்தேர்வின் போது அப்பாடத்திற்கு உரிய வினாத்தாள் வழங்கப்படாமல் தவறான வினாத்தாள் வழங்கப்பட்டது.எனவே, மாணவர்களால் அவ்வினாத்தாளின் அடிப்படையில் தேர்வு எழுத இயலாத நிலையில், அவர்கள் இது குறித்து தேர்வு கண்காணிப்பாளரிடம் விவரத்தை தெரிவித்தனர். அதனையடுத்து வினாத்தாள் மாறிய மாணவர்களுக்கு மட்டும் அன்றைய தேர்வு ரத்து செய்யப்பட்டு அத்தேர்வு நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்தது.

    இது தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் வினாத்தாள் மாற்றத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
    மேற்கண்ட வினாத்தாள் மாறிய விவகாரம் குறித்து விசாரணை செய்ய க.லட்சுமி பிரியா, தொழில்நுட்பக் கல்வி ஆணையர், செயலர், தமிழ்நாடு மாநில எஸ்.கிருஷ்ணசாமி, உறுப்பினர் ம.இளங்கோ ஹென்றி தாஸ், உயர்கல்வி மன்றம், மற்றும் அரசு இணைச் செயலாளர், உயர்கல்வித் துறை ஆகியோர் கொண்ட விசாரணைக் குழுவினை கீழ்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு அமைத்து அரசு ஆணையிட்டுள்ளது.

    * சென்னை பக்கலைக்கழகத்தில் 18-11-2022 நடைபெறவிருந்த முற்பதம் பருவத் தேர்வின் போது மூன்றாம் பருவத் தேர்வின் பொதுந்தமிழ் -111 வினாத்தாள் மாறிய விவகாரம் குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

    * இது போன்ற தவறுகள் மீண்டும் நிகழாதவாறு தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடனடிக்கைகள் தொடர்பான வழிமுறைகளை அரசுக்கு தெரிவிக்கவேண்டும்.

    * இந்தவறுக்கு பொறுப்பான அதிகாரிகள் அலுவலர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.

    * மேற்கண்ட குழுவின் விசரணை அறிக்கை இரண்டு மாதங்களுக்குள் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    * குழுவின் விசாரணைக்கு தேலையான அலுவலக வசதிகளை சென்னை பல்கலைக்கழகம் செய்து தரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....