Saturday, March 23, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்புதுவையில் எம்.பி.சி இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய நானே களமிறங்கி போராடுவேன் - பாமக நிறுவனர்

    புதுவையில் எம்.பி.சி இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய நானே களமிறங்கி போராடுவேன் – பாமக நிறுவனர்

    புதுவையில் எம்.பி.சி இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய நானே களமிறங்கி போராடுவேன் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளதாவது:

    புதுவை அரசின் ஏ, பி பிரிவு பணிகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்படுவது பெரும் சமூக அநீதி. இது தொடர்பான புதுவை மக்களின் உணர்வை பாட்டாளி மக்கள் கட்சி அறவழிப் போராட்டத்தின் மூலம் அரசுக்கு உணர்த்தியிருக்கிறது.

    புதுவை மக்களின் உணர்வுகளை அம்மாநில அரசு உணர வேண்டும்; மதிக்க வேண்டும். புதுவையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அனைத்து நிலைகளிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தான் முழுமையான சமூகநீதி. வாக்களித்த மக்களை  ஏமாற்ற நினைக்கக் கூடாது.

    பாட்டாளி மக்கள் கட்சியின் சமூக நீதிக்கான போராட்டம் தொடக்கமாக இருக்க வேண்டுமா? நிறைவாக இருக்க வேண்டுமா? என்பதை புதுவை அரசு தான் முடிவு செய்ய வேண்டும். அனைத்து நிலைகளிலும் எம்.பி.சி இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய அரசு தவறினால் நானே களமிறங்கி போராடுவேன்.

    இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

    சென்னை பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் குளறுபடி: அரசு ஆணையை வெளியிட்டது தமிழக அரசு…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....