Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன. நீர் சுத்திகரிப்பு சார்ந்து பல முறைகள் உலகின் அத்தனை நாடுகளிலும் பின்பற்றப்பட்டு வருகின்றன. 

    நீரின் தரத்தை சரியான அளவில் தங்களின் நாட்டு மக்களுக்கு வழங்க அந்தந்த நாடுகள் தங்களால் முடிந்த அளவு முயற்ச்சிகளை மேற்கொண்டுதான் வருகின்றன. இருப்பினும் தரமான குடிநீர் 100 சதவீதம் அனைவருக்கும் கிடைக்கிறதா என்றால் அது கேள்விக்குறிதான். புள்ளிவிவரங்களின் படி ஓவ்வொரு பத்து வினாடிகளுக்கும் ஒருவர் தரமற்ற குடிநீரால் உயிரிழக்கிறார்.

    நீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து, பல நாடுகளில் கடல் நீர் சுத்திகரிப்பு, மழை நீர் சேமிப்பு போன்ற பல முறைகள் பின்பற்றபடுகின்றன. இந்நிலையில் காற்றில் இருந்து தரமான குடிநீரை பிரித்தெடுக்கும் முறையை பல நாடுகள் கடந்த சில வருடங்களாக கையிலெடுத்து வருகின்றனர். அதை atmospheric water generator (AWG) என்ற கருவியின் மூலம் சாத்தியப்படுத்தி வருகின்றனர். 

    இந்தக் கருவியானது சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க உதவும். உலக நாடுகளில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் AWG எனும் கருவியை உற்பத்தி செய்து தேவைப்படும் மக்களுக்கு அளிக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. 

    ஆனால் சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பத தன்மையின் அளவை பொறுத்தே இக்கருவியை உபயோகிக்க முடியும் என்றும் இன்னும் சில பரிசோதனைகளுக்குப் பிறகு முழு அறிவிப்பை அவர்கள் வெளியிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

    ஒரே கதை ஆனாலும் வெற்றிப்பெற்ற அவதார்; ஒரு கடந்த கால பயணம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    adipurush

    சாதனை செய்யும் ஆதிபுருஷ்!

    ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள ‘ஆதிபுருஷ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியான 16 மணி நேரத்தில் அனைத்து மொழிகளிலும் 6 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. ராமாயண கதையின் ஒரு பகுதியை...