தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த கர்பிணிப்பெண் ஒருவர் தனது காதலர் மற்றும் தோழிகள் உள்பட 13 பேரை சயனைடு கலந்து கொடுத்து கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணான சராரத் ரங்சிவுதாபார்ன் (வயது 32) என்பவரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து, அந்தப் பெண்ணிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், உயிரிழந்த அவரது தோழி உள்பட மொத்தம் 13 பேரை சயனைடு விஷம் கொடுத்து கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட 13 பேரில் அந்தப் பெண்ணின் காதலனும் ஒருவர் என சொல்லப்படுகிறது. 2020 ஆம் ஆண்டில் இருந்து இந்தக் கொலைகள் நடந்ததாகவும், அந்தப் பெண்ணின் நண்பரான சிரிபோர்ன் கான்வாங்கின் இறப்பைத் தொடர்ந்து அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
மேலும் கொலைகளுக்கான காரணம் பணம் தான் என காவல்துறையினர் நம்புகின்றனர். அதோடு, நான்கு மாத கர்ப்பிணியான சராரத் முன்பு மனநல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
வாட்சப்பில் புதிய அப்டேட்! – பயனர்கள் ஆச்சரியம்..