Friday, March 15, 2024
மேலும்
    Homeதொழில்நுட்பம்வாட்சப்பில் புதிய அப்டேட்! - பயனர்கள் ஆச்சரியம்..

    வாட்சப்பில் புதிய அப்டேட்! – பயனர்கள் ஆச்சரியம்..

    ஒரே வாட்சப் கணக்கை கொண்டு பல போன்களில் பயன்படுத்தும் அம்சம் வாட்சப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

    உலகில் அதிகளவு அனைவராலும் பயன்படுத்தப்படும் தகவல் பரிமாற்றச் செயலி என்றால் அது வாட்சப் செயலியே. தற்போது, அனைத்து வயதினராலும் பயன்படுத்தப்படும் செயலியாகவும் வாட்சப் விளங்கி வருகிறது. அனைவரிடமும் வாட்சப் சென்று சேர்ந்ததன் முக்கியக் காரணம், பயன்படுத்த இது மிகவும் எளிதாக உள்ளதென்பதே. 

    மேலும், வாட்சப் நிறுவனம் அவ்வப்போது தங்களது பயனர்களை ‘அப்டேட்’ மூலம் கவர்ந்திழுத்த வண்ணம் இருக்கும். அந்த வகையில்தான் குரூப் சாட், இமோஜி, ஸ்டேட்டஸ், ஸ்டிக்கர் எனப் பல அம்சங்களை வாட்சப் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. 

    இந்த வகையில், வாட்சப் நிறுவனம் தற்போது புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, இதுவரை லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் போன்ற சாதனங்களில் மட்டுமே ஒரே கணக்கை பயனர்கள் பயன்படுத்த முடிந்தது. தற்போது அது அப்படியே மற்ற போன்களிலும் பயன்படுத்தும் வகையில் அறிமுகமாகி உள்ளது. இதை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதள பயனர்கள் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு வாட்சப் பயனர்கள் தாங்கள் பயன்படுத்தி வரும் பல்வேறு டிஜிட்டல் சாதனங்களில் தங்களது வாட்சப் கணக்கை லிங்க் செய்து பயன்படுத்தும் வகையிலான அம்சத்தை அறிமுகப்படுத்தினோம். அந்த வகையில் தற்போது ஒரே வாட்சப் கணக்கை கொண்டு பல போன்களில் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தி உள்ளோம் என வாட்சப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஐபிஎல் போட்டியிலிருந்து விலகினாரா வாஷிங்டன் சுந்தர்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....