Sunday, March 17, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு..

    இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு..

    இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் காலியாகயுள்ள 106 எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இந்த பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

    முதற்கட்டமாக, L600fl: Executive Level 1 சார்ந்த பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 96 காலியிடங்கள் உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க பொறியியல் துறையில் பி.இ., பி.டெக் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

    மேலும், இப்பணிகளுக்கு ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை ஊதியம் என்றும், இப்பணிக்கு விண்ணப்பிக்க 35 வயதுக்குள் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    அடுத்தக்கட்டமாக, Executive LeveL 2 சார்ந்த பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 10 காலியிடங்கள் உள்ளன.  இப்பணிகளுக்கு ஆண்டுக்கு ரூ.16 லட்சம் வரை ஊதியம் என்றும், இப்பணிக்கு விண்ணப்பிக்க 45 வயதுக்குள் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், இன்ஸ்ட்ரூமெண்டேசன் பிரிவில் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில் பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

    இப்பணியிடங்களுக்கு தகுதியானோர் நேர்முகத் தேர்வு மற்றும் உடற்த் தகுதி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பக் கட்டணமாக ரூ.300. இதனை எஸ்பிஐ வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டாம்.

    மேற்குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு www.iocl.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 22.03.2023 என்பது குறிப்பிடத்தக்கது. 

    நியூசிலாந்து வெற்றியால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற இந்தியா..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....