இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 395 அதிகாரிப் பணியிடங்களுக்கான என்டிஏ தேர்வுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது.
மத்திய பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள அதிகாரிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 395 அதிகாரிப் பணியிடங்களுக்கான என்டிஏ தேர்வுகள் வருகிற ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற பிறகு நடைபெறும் நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். நேர்முகத் தேர்வானது வருகிற ஜூலை தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் இந்த எழுத்துத் தேர்வானது, சென்னை, மதுரை, கோவை, திருச்சி, வேலூர் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க 2.7.2004-க்கும் 1.7.2007-க்கும் இடைபட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும். இயற்பியல், கணிதத்தை ஒரு பாடமாகக் கொண்ட பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும், விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்ட்டுள்ளது. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, 1 முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க www.upsconlin.nic.in என்ற இணையதளத்தை அனுகவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.1.2023 ஆகும்.
ஏர் இந்தியா விமான பெண் பயணி மீது சிறுநீர் கழித்த நபர் கைது