சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் கணக்குகள் திடீரென முடக்கப்பட்டதாக அதனை பயன்படுத்தும் பயனர்கள் புகார் கூறி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய பெயர் பெற்றது மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்ட்டாகிராம். உலகம் முழுவதும் இதனைப் பயன்படுத்தும் பயனர்களும் அதிகம்.
இந்நிலையில், நேற்றிரவு முதல் இன்ஸ்டகிராம் செயலியில் பலரின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்து வருகின்றன.
இதையும் படிங்க: நாடு முழுவதும் ஜிஎஸ்டி வசூல் எவ்வளவு தெரியுமா? புள்ளி விவரங்களை வெளியிட்ட மத்திய நிதி அமைச்சகம்
இதற்கு மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் தங்களின் பயனர்களுக்கு பதில் அளித்துள்ளது.
இதுகுறித்து இன்ஸ்டாகிராம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில், “இன்ஸ்டாகிராமில் கணக்குகள் முடக்கம் குறித்து ஆராய்ந்து வருகிறோம். இந்தப் பிரச்சனைக்கான காரணத்தை கண்டறியும் பணியில் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். தங்கள் சிரமத்திற்கு வருந்துகிறோம்” என பதிவிட்டுள்ளது.
We’re aware that some of you are having issues accessing your Instagram account. We’re looking into it and apologize for the inconvenience. #instagramdown
— Instagram Comms (@InstagramComms) October 31, 2022
இதையும் படிங்க: “உங்கள் பிரார்த்தனைக்கு அர்த்தம் உண்டு”: விபத்தில் சிக்கிய மகளுக்காக நடிகை ரம்பா ரசிகர்களிடம் உருக்கம்