குழந்தைகளை பள்ளியில் இருந்து, வீட்டிற்கு அழைத்துக்கொண்டு வரும் வழியில் எதிர்பாராதவிதமாக ரம்பாவும் அவரது குழந்தைகளும் கார் விபத்தில் சிக்கியுள்ளனர்.சிறு காயங்களோடு உயிர் தப்பிய அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .இந்நிகழ்வு அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜயலட்சுமி என்ற இயற்பெயரை கொண்ட நடிகை ரம்பா இயக்குனரும்,நடிகருமான சுந்தர்.சி அவர்களின் இயக்கத்தில் 1996-ஆம் ஆண்டு வெளிவந்த உள்ளத்தை அள்ளித்தா என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர். இதனையடுத்து தமிழ் சினிமாவில் கமல், ரஜினி, பிரசாந்த் , விஜய், அர்ஜுன் ஆகிய முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடியாக நடித்து புகழின் உச்சத்திற்கு சென்றவர்.
ரசிகர்களால் தொடையழகி என வர்ணிக்கப்பட்ட இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு இந்திர குமார் பத்மநாதன் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு கனடாவில் குடியேறினார்.இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், லாவண்யா மற்றும் சாஷா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.
எப்போதும் சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை ரம்பா, தற்போது தனக்கு ஏற்பட்ட கார் விபத்து குறித்த பதிவு ஒன்றை ஷேர் செய்து அதில் ரசிகர்களிடம் தயவுசெய்து எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் ..உங்கள் பிரார்த்தனைகளுக்கு நிறைய அர்த்தம் இருக்கிறது என கேட்டுக்கொண்டுள்ளார்.
View this post on Instagram
நடிகை ரம்பா பதிவிட்டுள்ள அந்த விபத்து செய்தியில் தனது குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்துக்கொண்டு வீடு திரும்பும் போது தங்களது கார் மற்றொரு கார் மீது மோதியது!.அப்போது நானும் காரில் இருந்த மற்றவர்களும் சிறு காயங்களுக்குள்ளான நிலையில், எனது மகள் சாஷா மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாஷாவின் காயங்களின் அளவு இன்னும் தெரியவில்லை.
இதனால் எனது மகள் சாஷா விரைவில் குணமடைய அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு ரம்பா கேட்டுக் கொண்டார்.அதோடு சேதமடைந்த காரின் புகைப்படத்தையும் ,மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புகைப்படத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார் .
இதையும் படிங்க: ‘ஒரு நல்ல படம்னா……’ – நடிகர் அஜித்குமார் சொன்ன விஷயத்தால் கவலையில் ரசிகர்கள்