உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் மாநிலம் முழுவதும் உள்ள இணை இயக்குனர்கள் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி,
உயர் கல்வி துறையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் செயல்பாடு குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாணவர் சேர்க்கை ஆசிரியர் பணியிடங்கள் ஆகியவை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும் பொறியியல் மாணவர் சேர்க்கையில் கடந்த ஆண்டை விட 10000 மாணவர்கள் கூடுதலாக இந்த ஆண்டு சேர்ந்துள்ளனர்.
அதேபோல் பிளஸ் 2 துணை தேர்வு முடிகள் தற்போது வெளியாகி உள்ளதால், 18 நவம்பர் வரை முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நடத்த அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு உத்தரவிடபட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் எந்த கல்லூரிகளிலும் காலியிடம் இல்லாத வகையில் மாணவர் சேர்க்கை நடத்த திட்டமிட்டு இருப்பதாவும் கூறினார்.
பி எச் டி படிப்பு 20 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இந்த கல்வியாண்டில் துவங்கப்பட்டு உள்ளதாகவும், சென்னை மாநில கல்லூரியில் செவிதிறன் குறைபாடு உள்ளவர்களுக்கு எம்.காம் முதுகலை படிப்பு தற்போது துவங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.கடந்த அரசால் அறிவிக்கப்பட்டு காட்டபட்டாமல் விடப்பட்ட 13 கல்லூரிகளில் 8 கல்லூரிகளுக்கான கட்டிடப்பணி துவங்கப்பட்டு உள்ளது.
அதேபோல் திமுக அரசு அறிவித்த 20 கல்லூரிகளில் 9 கல்லூரிக்களுக்கான கட்டுமான பணிகள் துவங்கப்பட்டு உள்ளது.புதிய கல்லூரிகள் உருவாவதால் காலி இடங்கள் இருப்பதால் ,1895 காலியிடங்களுக்கான கௌரவ விரிவுரையாளர்கள் நேர்முக தேர்வு மூலம் உடனடியாக நியமிக்கப்பட உள்ளனர்.
Ews ஒதுக்கீடு தமிழக அரசு நாளை அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்ட உள்ளது . திமுக சார்பில் மறுசீராய்வு செய்யப்பட உள்ளது.இப்போது நியமனம் செய்யும் பணிகளில் EWS ஒதுக்கீடு பின்பற்றபட மாட்டாது.ராகிங் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வரும் 16 ம் தேதி அரசு கல்லூரி முதல்வர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறும் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: வெள்ளக்காடாக மாறிய போர் வீரர்களின் கல்லறை…மழையின் கோர தாண்டவம்..!