Friday, March 15, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புஇந்து சமய அறநிலையத்துறையில் புதிதாக வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள்; சம்பளம் எவ்வளவு தெரியுமா?

    இந்து சமய அறநிலையத்துறையில் புதிதாக வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள்; சம்பளம் எவ்வளவு தெரியுமா?

    இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அருள்மிகு சித்தி புத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வரர் கோயிலில் காலி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

    இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து நவம்பர் 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

    கணினி இயக்குபவர் பணிக்கு 15,300-48,700 வரை மாத சம்பளம் வழங்கபப்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் பணியாளர் மற்றும்  ஓதுவார் பணிகளுக்கு மாதம் சம்பளம் 12,600-39,900 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    அதேபோல், சுயம்பாகி பணிக்கு மாதம் சம்பளம் 13,200-41,800 வரையும், மேலக்குழு நாதஸ்வர பணிக்கு மட்டும் மாத சம்பளம் 15,300-48,700 வரையும், பகல் காவலர் மற்றும் இரவு காவலர் பணிகளுக்கு மாத சம்பளம் 11,600-36,800 வரையும், துப்பரவாளர் பணிக்கு மாத சம்பளம் 10,000 முதல் 31,500 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க:சிவகங்கை மாவட்டத்தில் நாளை முதல் அக்.31ம் தேதி வரை 144 தடை உத்தரவு

    மேற்கண்ட அனைத்து பணிகளின் பிரிவுகளிலும் ஒரு காலிப் பணியிடங்கள் மட்டுமே உள்ளன. 

    குதி:  இந்த அனைத்து பணிகளுக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். 

    மின் பணியாளர் பணிக்கு விண்ணப்பிப்போர் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்குபவர் பணிக்கு விண்ணப்பிப்போர் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தட்டச்சு பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    வயது: 18 வயது பூர்த்தியடைந்ததாகவும், 45 வயது மிகத்தவராகவும் இருக்க வேண்டும். 

    பூர்த்தி செய்ய்யப்பட்ட உங்கள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: செயல் அலுவலர், அருள்மிகு சித்தி புத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வரர் திருக்கோயில், ராயப்பேட்டை, சென்னை-14 

    மேலும் இந்த வேலைவாய்ப்பு பற்றி தகவல்களை hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துக்கொள்ளலாம்.

    இதையும் படிங்க: ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை: சோகத்தில் நகை பிரியர்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....