Monday, March 18, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புபள்ளிக்கல்வித் துறையில் புதிய வேலைவாய்ப்பு; மிஸ் பண்ணிடாதீங்க, அப்புறம் வருத்தப்படுவீங்க!

    பள்ளிக்கல்வித் துறையில் புதிய வேலைவாய்ப்பு; மிஸ் பண்ணிடாதீங்க, அப்புறம் வருத்தப்படுவீங்க!

    தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளின் நிர்வாகம், மாணவர்களுக்கான புதிய திட்டங்கள், பல்வேறு செயல்பாடுகளுக்கு மாநிலம் முழுவதும் கல்வி அலுவலர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் நியமிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளவும், துறை சார்ந்த சர்வே, திட்டங்களை செயல்படுத்துதல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில் கல்வி அதிகாரிகள், ஆசிரியர்களுடன் இணைந்து செயலாற்ற இளைஞர்களை தேர்வு செய்யும் தமிழ்நாடு கல்வி ஊக்கத்தொகை திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது.

    இதன் மூலம் பள்ளிக்கல்வித்துறையில் கல்வி அதிகாரிகள், ஆசிரியர்களுடன் இணைந்து செயலாற்ற இளநிலை முதுநிலை என்ற இரண்டு பிரிவுகளில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட்ட உள்ள 38, 114 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் வரும் 30-ம் தேதிக்குள் https://tnschools.gov.in/ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

    தேர்வாகும் ஜூனியர்களுக்கு மாதம் ரூ.32,000, சீனியர்களுக்கு மாதம் ரூ.45,000 மதிப்பூதியம் வழங்கப்படும் என்றும் 2024 வரை இரண்டு ஆண்டு காலத்துக்கு தற்காலிக அடிப்படையிலேயே பணி அமையும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

    போதைக்கு அடிமையான கணவனின் முகத்தில் கொதிக்கும் ரசத்தினை ஊற்றிய மனைவி!!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....