Friday, March 15, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புரேஷன் கடைகளில் குவியும் வேலைவாய்ப்பு; மக்களே விண்ணப்பித்துவிட்டீர்களா?

    ரேஷன் கடைகளில் குவியும் வேலைவாய்ப்பு; மக்களே விண்ணப்பித்துவிட்டீர்களா?

    தமிழகத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்புவது குறித்து அறிவிப்பு வெளிவந்துள்ளது. 

    தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக்கடைகளில் (ரேஷன் கடைகளில்) 6,000 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ளது. 

    அந்த  அறிவிப்பின்படி, விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விற்பனையாளர்கள் பதவிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சியும், கட்டுநர்கள் பதவிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர்,  நேர்முகத்‌ தேர்வில்‌ பெற்ற மதிப்பெண்கள்‌ மற்றும் விண்ணப்பதாரர்‌ சார்ந்துள்ள வகுப்பு வாரியான இன சுழற்சி அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவார்கள். 

    மேலும், இந்த பணியிடங்களுக்கு http://www.drbobo.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ளவர்கள் நவம்பர் 11-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் கூட்டுறவுத் துறை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: ‘பேட்டி கொடுக்க கூடாது’ தடுத்த காவல்துறை; எகிறிய எடப்பாடி..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....