Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்61 வயதில் 87 திருமணங்கள்.,‘ பிளேபாய் கிங்’ பட்டம்., மீண்டும் 88-வது திருமணம்., என்னடா நடக்குது...

    61 வயதில் 87 திருமணங்கள்.,‘ பிளேபாய் கிங்’ பட்டம்., மீண்டும் 88-வது திருமணம்., என்னடா நடக்குது இங்க..!

    இந்தோனேஷியாவைச் சேர்ந்த 61 வயது முதியவர் விவாகரத்து செய்த முதல் மனைவியையே 88-வது முறையாக திருமணம் செய்து கொண்டு “பிளேபாய் கிங்” என்ற பட்டத்தை பெற்றுள்ளார்.

    கூட்டுக்குடும்பங்களில் வாள்பவர்களின் எண்ணிக்கை என்பது நாளுக்குநாள் கனவாகவே மாறும் அளவுக்கு குறைந்து வருகிறது.நமது சமூகத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலை மாறி ,தற்போது ஒரு மனைவியையே சமாளிக்க முடியாமல் விவாகரத்துகள் என்பது அதிகரித்த வண்ணமாகவே உள்ளது .அப்படிப்பட்ட இந்த காலகட்டத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட திருமணங்கள், பல குழந்தைகள் என்ற செய்திகள் அனாசயமாக உலக ட்ரெண்டாகி வருகிறது. அந்த வரிசையில் 87வது திருமணம் செய்து கொண்டு ‘பிளே பாய் கிங்’ என்ற பட்டத்தை பெற்றுள்ளார் இந்தோனேசியவைச் சேர்ந்த கான் என்ற நபர்.

    மேற்கு ஜாவா மாநிலம் மஜலெங்கா பகுதியைச் சேர்ந்தவர் 61 வயதான விவசாயி கான். இவர் தற்போது 88வது திருமணம் செய்து கொண்டார்.இவர் தனது 14-வது வயதில் தன்னை விட 2 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இரண்டு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த பிறகு, முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் , அவர்களின் திருமண வாழ்க்கை முடங்கி ஒருவருக்கொருவர், விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.

    இதையும் படிங்க: கொளத்தூர் என்ன கன்னித்தீவா? திமுகவினரை சாடிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…

    இங்கிருந்துதான் கானின் திருமணப் பட்டியல் நீளத் தொடங்கியது.முதல் திருமண முறிவிற்கு பிறகு 87 திருமணங்களை செய்துகொண்ட கான் அணைவருடனும் ஓராண்டு,இரண்டு மாதங்கள் என வாழ்ந்து ஒவ்வொருவறையாக விவாகரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து கான் பேசுகையில் “எனது முதல் மனைவிக்கு நான் கொடுத்த மோசமான அணுகுமுறையால், அவர் என்னோடு வாழ பிடிக்காமல் இரண்டு வருடங்களில் என்னிடமிருந்து விவாகரத்து கேட்டு பிரிந்து சென்று விட்டார். பெண்களுக்கு நல்லது இல்லாத செயல்களை செய்ய நான் எப்போததும் விரும்பமாட்டேன் . அவர்களின் உணர்வுகளுடன் விளையாட மறுக்கிறேன்.

    ஒழுக்கக்கேடு செய்வதை விட, திருமணம் செய்துகொள்வதே சிறந்தது . இப்போது நான் 88-வதாக மறுமணம் செய்துகொள்ளும் பெண் என்னுடைய 86வது மனைவி. “நாங்கள் இரண்டு மாதங்கள் மட்டுமே ஒன்றாக இருந்தோம், நீண்ட காலத்திற்கு முன்பே பிரிந்திருந்தாலும், அவர் என்னை மீண்டும் திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருக்கிறார்,” என்று அவர் கூறியிருக்கிறார்.

    அதேபோல் பெண்களை தன்னிடம் ஈர்க்க ஆன்மீகத்தின் உதவியை நாடியதாகவும் கூறிய ,கானுக்கு 87 திருமணங்களில் ,எத்தனை குழந்தைகள் பிறந்துள்ளன என்பது பற்றிய எந்த விவரங்களும் சரியாக தெரியவில்லை.

    கடந்த ஆண்டு இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் உயிரிழந்த 76 வயது மதிக்கத்தக்க சானா என்பவர் 39 மனைவிகள், 94 குழந்தைகள், 33 பேரக்குழந்தைகள் மற்றும் ஒரு கொள்ளுப் பேரக்குழந்தை என ,181 பேரைக் கொண்ட ஒரு பெரிய குடும்பத்திற்கு தலைவராக இருந்து மறைந்து “உலக சாதனை” செய்துவிட்டு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது .

    இதையும் படிங்கஉக்ரைனிலிருந்து 1.40 கோடி மக்கள் இடம்பெயர்வு; ஐ.நா. அதிர்ச்சி தகவல்

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....