Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுடி20 உலகக்கோப்பை: வெற்றிக்கனியை ருசித்த பாகிஸ்தான்; தோல்வியில் தென்னாப்பிரிக்கா....

    டி20 உலகக்கோப்பை: வெற்றிக்கனியை ருசித்த பாகிஸ்தான்; தோல்வியில் தென்னாப்பிரிக்கா….

    இருபது ஓவர் உலககோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வியைத் தழுவியது. 

    2022-ம் ஆண்டிற்கான உலகக் கோப்பை தொடரில் இன்று சிட்னியில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை மேற்கொண்டது. 

    பாகிஸ்தான் அணி முதல் ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரரான ரிஸ்வானை 4 ரன்களுக்கு இழந்தது. இதன் பின்பு களமிறங்கிய முகமது ஹாரிஸ் 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பெவிலியன் நோக்கி திரும்பினார். இதைத்தொடர்ந்து, 

    கேப்டன் பாபர் ஆஸமை 6 ரன்களுக்கு வெளியேறியது. இதைத்தொடர்ந்தும் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. 13-வது ஓவரின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்து சற்று தடுமாறியது பாகிஸ்தான். 

    இதன்பிறகுதான், மாயாஜாலம் நிகழ்ந்தது. ஆம், 6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஷதாப் கானும் இஃப்திகாரும் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்தக் கூட்டணி மட்டுமே 6 ஓவர்களில் 82 ரன்கள் அடித்து அனைவரையும் வியக்க வைத்தது. மொத்ததில் இருபது ஓவர்கள் முடிவில், பாகிஸ்தான் அணி  9 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. 

    இதைத்தொடர்ந்து, 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி களமிறங்கியது. தென்னாப்பிரிக்கா தரப்பில் பவுமா மற்றும் டி காக் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஆனால், ஆரம்பத்திலேயே அதிர்ச்சி தரும் விதமாக டி காக், ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டத்தை விட்டு வெளியேறினார். இதைத்தொடர்ந்து வந்த விக்கெட்டுகளும் பெரிதும் சோபிக்கவில்லை. 

    ஆட்டம் 9 ஓவர்களில் இருந்தபோது தென்னாப்பிரிக்க அணி 4 விக்கெட்டிற்கு 99 ரன்கள் எடுத்திருந்தது அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. இதன் பின்னர், மீண்டும் ஆட்டம் தொடங்கப்படும் போது, டக்-ஓர்த் முறைப்படி 14 ஓவர்களாக ஆட்டம் குறைக்கப்பட்டு 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று மாற்றியமைக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிவிட்டது. இதன் விளைவாக, தென்னாப்பிரக்க அணி 14 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு வெறுமனே 108 ரன்கள் எடுத்து, 33 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வியைத் தழுவியது. 

    இதையும் படிங்க: டி 20 உலகக்கோப்பை: பதுங்கி பாய்ந்த பாகிஸ்தான்.., தப்புமா தென்னாப்பிரிக்கா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....