Saturday, March 16, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புவிரைவில் குரூப்-2 தேர்வு முடிவுகள் - அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி

    விரைவில் குரூப்-2 தேர்வு முடிவுகள் – அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி

    குரூப்-2 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியாகும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

    குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதும், 6.82 லட்சம் பெண்களும், 4.96 லட்சம் ஆண்களுமாக மொத்தம் 11.78 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.  இதைத்தொடர்ந்து, குரூப்-2 மற்றும் 2ஏ பதவிகளில் உள்ள 5,529 காலி பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு கடந்த மே 21-ம் தேதி நடைபெற்றது. 

    இந்த தேர்வை தமிழகம் முழுவதிலும் இருந்து 9 லட்சத்து 94 ஆயிரத்து 890 போ் எழுதினர்.மேலும், 397 கிராம நிர்வாக அலுவலர், 2 ஆயிரத்து 792 இளநிலை உதவியாளர், 34 வரித்தண்டலர், 509 நில அளவையர், 74 வரைவாளர், 1,901 தட்டச்சர், 784 சுருக்கெழுத்து தட்டச்சர் உள்பட டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 பதவிகளில் உள்ள 7 ஆயிரத்து 301 பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஜீலை மாதம் 24-ம் தேதி நடைபெற்றது. 

    இதையடுத்து, குரூப் 2 தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்டு, முதன்மை எழுத்துத்தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்து. ஆனால் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. 

    இந்நிலையில், குரூப்-2 தேர்வு முடிவுகள் இம்மாதம் வெளியாகும் எனவும், குரூப்-4 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியாகும் எனவும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

    இதையும் படிங்க: நவீன வசதிகளுடன் உருவாகும் மெரினா வர்த்தக மையம் – என்னென்னெ வரப்போகிறது தெரியுமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....