Monday, March 18, 2024
மேலும்
    Homeவாழ்வியல்ஆரோக்கியம்எப்போதும் இளமை, நார்ச்சத்து இன்னும் பல - ப்ரோக்கோலியின் பயன்கள் உள்ளே!

    எப்போதும் இளமை, நார்ச்சத்து இன்னும் பல – ப்ரோக்கோலியின் பயன்கள் உள்ளே!

    பச்சை நிற காய்கறி ப்ரோக்கோலியின் மருத்துவ பயன்கள்:

    நமது நாட்டில் பயன்படுத்தப்படும் காய்கறிகளில் பல அந்நிய நாடுகளிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டதாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது இந்தியாவில் பலரும் சாப்பிடக்கூடிய ஒரு காய்கறியாக ப்ரக்கோலி இருக்கிறது.

    இந்த ப்ரக்கோலி மத்திய தரைக்கடல் பகுதியை சுற்றியுள்ள நாடுகளை பூர்வீகமாக கொண்டதாகும். பழங்காலத்தில் ரோமானியர்களின் உணவில் ப்ரோக்கோலியை அதிகம் பயன்படுத்தினர்.

    தற்போது உலகெங்கிலும் உள்ள மக்கள் ப்ரோக்கோலியை அதிகம் விரும்பி உண்கின்றனர். முட்டைகோஸ், காலிஃப்ளவர் குடும்பத்தை சார்ந்த ப்ரோக்கோலியில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. அத்தகைய ப்ரோக்கோலியை நாம் சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம் .

    வைட்டமின் சத்துகள் நிறைந்தது:

    ஒரு கப் ப்ரோக்கோலியில் வெறும் 25 கலோரிகள் மட்டுமே உள்ளது. அதிலும் 5 கிராமுக்கும் குறைவான கார்போஹைட்ரேட் மட்டுமே இதில் உள்ளது. இதில் கொழுப்புகள் சிறிதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கப் ப்ரோக்கோலியில் நாம் உடலுக்கு ஒரு நாளைக்கு தேவைப்படும் வைட்டமின் கே சத்தானது 250% நிறைந்து உள்ளது.

    மேலும், நாம் உடலுக்கு ஒரு நாள் விதம் தேவைப்படும் வைட்டமின்களான ஏ, பி 6, பி 2 மற்றும் ஈ, அத்துடன் பாஸ்பரஸ், கோலைன், மாங்கனீசு, தாமிரம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை தினசரி தேவையை விட 10% க்கும் அதிகமாக உள்ளது மற்றும் 5% சதவீதத்திற்கும் குறைவான மெக்னீசியம், துத்தநாகம், இரும்பு , கால்சியம் மற்றும் செலினியமும் அடங்கி உள்ளது.

    ப்ரோக்கோலியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஒரு கப் சமைக்கப்படாத ப்ரோக்கோலியில் 2 முதல் 3 கிராம் வரை ஃபைபர் சத்து நிறைந்து உள்ளது. இது நமது உடலின் நல்ல செரிமான ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது மற்றும் நோயினால் ஏற்படும் அழற்சியை எதிர்த்து போராட உதவுகிறது.

    நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நமது மனநிலையுடன் பிணைக்கப்பட்டுள்ள குடலில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களுக்கு உணவளிக்கிறது. பொதுவாகவே, நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் ஒழுங்குமுறைக்கும் நிலையான ஆற்றலுக்கும் உதவுகிறது.

    புற்றுநோயை செல்களை அழிக்கிறது:

    ப்ரோக்கோலி புற்றுநோயை குறைப்பதிலும், அப்புற்று நோய் ஏற்படாமல் தடுப்பதிலும் சிறப்பாக செயல்படுவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ப்ரோக்கோலியில் சல்போரபேன் எனப்படும் வேதிப்பொருள் அதிகம் உள்ளது.

    மேலும், நடுத்தர வயது ஆண்களில் ஏற்படும் புரோஸ்டேட் சுரப்பி புற்று நோய்களைத் தடுப்பதில் ப்ரோக்கோலி சிறப்பாக செயல்படுகிறது. குடல், ஈரல், சிறுநீர்ப்பை, மார்பகம் மற்றும் நுரையீரல்களில் ஏற்படும் புற்றுநோய்களை குணப்படுத்தும் சக்தியை ப்ரோக்கோலி கொண்டிருக்கிறது.

    எலும்புகளை பாதுகாக்க:

    எலும்புகள் வலிமையாக இருக்க வைட்டமின் கே சத்து அதிகம் தேவைப்படுகிறது. ப்ரோக்கோலியில் வைட்டமின் கே சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.

    வாரத்திற்கு இரண்டு முறை ப்ரோக்கோலியை பக்குவம் செய்து உணவாக சாப்பிடுபவர்களுக்கு எலும்புகள், பற்கள் போன்றவை வலிமை பெறுகிறது. மேலும் இந்த வைட்டமின் கே சத்து எலும்புகளுக்குத் தேவையான கால்சியம் சத்து சிறுநீர் வழியாக வெளியேருவதையும் தடுக்கிறது.

    ஞாபக சக்தி அதிகரிக்க:

    ப்ரோக்கோலி வெண்டைக்காய் மற்றும் வல்லாரைக் கீரையினைப் போல் ஞாபக சக்தியினை அதிகரிப்பதாக உள்ளது. இதனால் 8 மாதக் குழந்தை முதல் முதியோர் வரை அனைவரும் இதனை வாரத்தில் 2 முறையாவது எடுத்துக் கொண்டால் நிச்சயம் ஞாபக சக்தியானது அதிகரிக்கும்.

    சரும பாதுகாப்பு:
    ப்ரோக்கோலியில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன. இந்த சத்துக்கள் சருமத்தில் ஈரப்பதம் குறையாமல் பாதுகாப்பதோடு, தோல் சுருக்கம் ஏற்படாமல் தடுத்து, தோலில் பளபளப்பு தன்மையை அதிகரித்து, இளமை தோற்றத்தை உண்டாக்குகிறது.

    இளமை தோற்றத்தை தக்கவைக்க:

    ப்ரோக்கோலியில் அதிகம் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. ப்ரோக்கோலியை வாரத்தில் குறைந்தது இரண்டு முறையாவது சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் ஏற்படும் ப்ரீ ராடிக்கல்கள் செல்களின் அழிவினை தடுத்து, உடலுக்கு புத்துணர்ச்சி தந்து தோல் சுருக்கங்கள் ஏற்படுவதை தாமதப்படுத்தி எப்போதும் இளமையுடன் இருக்குமாறு செய்கிறது.

    பற்றி எறிந்த ராஜபக்சேவின் வீடு, பதற்றத்தின் உச்சத்தில் இலங்கை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....