Wednesday, March 20, 2024
மேலும்
    Homeவாழ்வியல்ஆரோக்கியம்இறந்த பிறகும் ஒரு வருடம் அசையும் உடல்கள்: ஆராய்ச்சியில் வெளிவந்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள்..!

    இறந்த பிறகும் ஒரு வருடம் அசையும் உடல்கள்: ஆராய்ச்சியில் வெளிவந்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள்..!

    “மீன் செத்தாக் கருவாடு! நீ செத்தா வெறுங்கூடு!’’ என்று பலர் கூறுவது உண்டு.

    மரணத்திற்குப் பின் என்ன நடக்கிறது என்பது இன்று வரையிலும் மர்மமான ஒன்று. இருப்பினும் அந்த மர்மத்தை உடைக்க பல கட்ட ஆராய்ச்சிகள் இன்று வரையிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அப்படி ஒரு ஆராய்ச்சியில் இறந்த பிறகும் மனித உடல் தொடர்ந்து நகர்வதாகக் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதிலும் ஒரு வருடம் தாண்டியும் இறந்த உடல்கள் அசைவது மிகவும் வியப்பாகவும் திகிலாகவும் இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

    இறந்த உடல்கள் அசைவதை கண்டுபிடித்த ஆராய்ச்சிகள் குறித்த தகவல்களை இனி பார்க்கலாம் வாங்க..!

    அணு முதல் அண்டம் வரையிலான ஆராய்ச்சிகள் விஞ்ஞானிகளால் ஒவ்வொரு நாளும் நிகழ்த்தப்பட்டு மனித உலகை ஆச்சரியப்படுத்தி வரும் நிலையில், மனித உடல் சார்ந்த புதிய ஆராய்ச்சியை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நிகழ்த்தி வருகின்றனர்.

    அதில், ஆஸ்திரேலியாவின் தடவியல் ஆராய்ச்சியாளர்களால் 2018-ம் ஆண்டு கேம்ஸ்பரில் உள்ள இறந்த உடல்களை பாதுகாக்கும் பண்னையில் உயிரற்ற மனித உடல்கள் குறித்த ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது.

    ’Australian Facility for Taphonomic Experimental Research’ என்று அறியப்படும் இந்த பண்ணை, ஆஸ்திரேலியாவில் பிரேத பரிசோதனை இயக்கத்தில் முன்னோடி ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றது.

    இந்த ஆராய்ச்சி கூடத்தில் கிட்டத்தட்ட 17 மாதங்களாக கேமராக்கள் பொருத்தி இறந்த ஒரு உடலை கண்காணித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். அதில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு முப்பது நிமிடத்திற்கும் ஒரு முறை தானாக உடல் நகர்வதைக் கண்டறிந்துள்ளனர்.

    அந்த கேமராக்களில் இறந்த உடல்கள் நகரும் காட்சிகள் பதிவாகியுள்ளது என இந்த ஆய்வின் தலைமை ஆராய்ச்சியாளரான அலிசன் வில்சன் கூறியுள்ளார். மேலும் அதில் உடல் மேல் இருந்த கை தானாக நகர்ந்து அசைந்தக் காட்சிகளைக் கண்டு அதிர்ந்துள்ளனர்.

    இறந்த பிறகு உடலின் அனைத்து உடல் உறுப்பு செயலிழப்புந்துவிடும் என நம்பப்பட்டு வரும் நிலையில் இந்த ஆய்வு மக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் திகிலையும் ஏற்படுத்தியுள்ளது.

    இந்த ஆராய்ச்சி குறித்து அலிசன் வில்சன் கொடுத்த விளக்கம் என்னவென்றால், “மனித உடல்கள் சிதைவடையும்போது இந்த அசைவு நிகழ்கிறது. உடலில் உள்ள தசை நார்கள் வறண்டு போகும் போது உடலில் அசைவுகள் ஏற்படுகிறது என்று நாங்கள் நம்புகிறோம் என்றும்…

    இதன் மூலம் காணமல் போனவர்கள் ஒருவேளை மரணமடைந்திருந்தால்,அவர்களது உடல்கள் முழுவதும் சிதைய எடுத்து கொண்ட கால அளவை கணக்கில் கொண்டு அவர்கள் இறந்த சரியான நேரத்தை போலீஸார் கண்டறிய உதவும்” என்றும் வில்சன் தெரிவித்துள்ளார்.

    தடய அறிவியல் குறித்த சர்வதேச அளவிலான பத்திரிகையில் வில்சனின் இந்த ஆராய்ச்சி இடம்பெற்று மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இறந்த பிறகு உடலின் அனைத்து உறுப்புகளும் செயலிழந்துவிடும் என நம்பப்பட்டு வரும் நிலையில் இந்த ஆய்வு உண்மையிலேயே ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

    உடல் நகர்வது என்பது சக மனிதனால் அல்லது விலங்குகளால் மட்டுமே செய்ய முடியும். அதுவரையில் அந்த உடல் இருந்த இடத்தில் அப்படியே தான் இருக்கும் என்பது அனைவருடைய நம்பிக்கையாக இருக்கிறது. ஆனால் அது உண்மையில்லை என்பதை நிரூபிக்கிறது இந்த ஆய்வு. இந்த ஆராய்ச்சி புலன் விசாரணை சந்தேகங்களுக்கும் விடையாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார் ஆராய்ச்சியாளர் அலிசன் வில்சன்.

    இது போன்ற பல ஆச்சரியமான நிகழ்வுகள் நம்மை சுற்றி அன்றாடம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. நீங்கள் அறியாத தகவல்களை தினந்தோறும் அறிந்துகொள்ள தினவாசல் செய்திகளோடு இணைந்திருங்க !

    இதையும் படிங்கஅடாத மழையிலும் மிதக்கதா சென்னை: பட்டியலிடும் அமைச்சர் கே என் நேரு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....