Monday, March 18, 2024
மேலும்
    Homeவாழ்வியல்ஆரோக்கியம்'ரத்த அழுத்தத்துக்கு இனி நோ சொல்லுங்க' - உலக உயர் ரத்த அழுத்த தின...

    ‘ரத்த அழுத்தத்துக்கு இனி நோ சொல்லுங்க’ – உலக உயர் ரத்த அழுத்த தின கட்டுரை!

    உயர் ரத்த அழுத்த தினமானது ஒவ்வொரு ஆண்டும் மே 17ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. உலக உயர் ரத்த அழுத்த குழுவானது 2005 ஆம் ஆண்டு மே 14ம் தேதி இந்த நாளினை அறிமுகப்படுத்தியது. 2006 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் நாளில் அனுசரிக்கப்பட்ட இந்த நாளது இன்று வரை தொடர்ந்துக்கொண்டிருக்கிறது. தற்பொழுது 85 நாடுகள் இந்த குழுவில் இணைந்துள்ளன.

    இந்தக் குழுவானது ரத்த அழுத்தத்தினை பற்றிய விளைவுகளைப் பொதுமக்களுக்கு எடுத்துக்கூறுவதோடு நின்றுவிடாமல், ரத்த அழுத்தம் உருவாகும் காரணங்களை பற்றியும், அதிலிருந்து தப்பிக்கும் வழிகள் பற்றியும் ஆராய்ச்சி செய்து வருகிறது.

    உயர் ரத்த அழுத்தம் (ஹைப்பர் டென்ஷன் ) என்றல் என்ன..?

    பெரும்பாலான மக்களிடம் பொதுவாகவே உயர் ரத்த அழுத்தம் காணப்படுகிறது. இதனால் எந்த விதமான விளைவுகள் ஏற்படாமல் இருந்தாலும், தொடர்ந்து பாதிக்கப்படுவதால் உடலின் பல்வேறு பாகங்களும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

    இதயம் தொடர்பான நோய்களும், கல்லீரல், கண் சம்பந்தப்பட்ட வியாதிகள் இந்த ரத்த அழுத்தத்தினால் உருவாகின்றது. உலகம் முழுவதிலும் இதயம் சம்பந்தமாக இறப்பவர்களில் பெரும்பாலானோர் ரத்த அழுத்தம் காரணமாகவே இறக்கின்றனர். 

    ரத்த அழுத்தமானது இரண்டு அளவுகள் கொண்டு அளக்கப்படுகிறது. இதன்படி ஆரோக்கியமான மனிதர் ஒருவருக்கு ரத்த அழுத்தமானது 130/85 ற்குள் இருக்க வேண்டும்.

    அதுவே ஒருவருக்கு 140-159/90-99 அளவு ரத்த அழுத்தம் இருந்தால் அது கிரேடு ஒன் ரத்த அழுத்தம் எனவும் 160/100 க்கு மேல் இருந்தால் கிரேடு டூ ரத்த அழுத்தம் எனவும் அழைக்கப்படுகிறது.

    இதை உயர் அத்த அழுத்தமானது பெரும்பாலும் வயதானவர்களுக்கே இருந்து வந்துள்ள நிலையில் இப்போதைய காலகட்டத்தில் இளைஞர்களும் பதிக்கப்படுகின்றனர். பெண்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் ஆண்களுக்கு அதிகமாகவும், கிராமத்தில் வசிப்பவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் நகர்வாசிகளுக்கும் இந்த உயர் ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளது.

    இந்திய அளவில் ஐந்தில் ஒருவர் உயர் ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் பார்க்கையில், கிட்டத்தட்ட ஒரு பில்லியனுக்கும் அதிகமானோர் இந்த உயர் ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக எந்த விதமான அறிகுறிகளையும் இல்லாததால், ரத்த அழுத்தத்தினை அளவிடும் போது மட்டுமே இதனைக் கண்டறிய முடிகிறது.

    கடந்த கால நிகழ்வுகள்..

    கடந்த 2020 ஆம் ஆண்டு உருவாகிய கொரோனா வைரஸ் உலகத்தின் போக்கினையே மாற்றியுள்ளது என்பதில் எந்த வித சந்தேகங்களும் இல்லை. இந்த இரண்டு வருட காலத்தில், பலர் தங்களது வேலைகளை இழந்துள்ளனர்.

    பெரும்பாலானோர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் தள்ளப்பட்டுள்ளனர். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோரின் நிலைமையோ மிகவும் கொடுமையாய் இருந்தது. வேலைகளை இழந்ததாலும், தங்களது கல்வி பாதியிலேயே நின்றுவிட்டதாலும், பெரும்பாலான இளைஞர்களுக்கு தங்களது எதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்ட நிலை ஏற்பட்டுள்ளது.

    சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் 12,000 அலுவலர்கள் பரிசோதிக்கப்பட்டனர். அவர்களில் 78 சதவீதத்தினர் இந்த கொரோனா காலகட்டமானது தங்களது மன ஆரோக்கியத்தினை எதிர்மறையாக பாதித்து விட்டதாய்க் கூறியுள்ளனர். இவர்கள் அலுவலகம் மட்டுமல்லாது தங்களது சொந்த வாழ்க்கைகளிலும் பல இன்னல்களைச் சந்தித்து வருவதாய் கூறியுள்ளனர்.

    85 சதவீதம் மக்கள் தங்களுக்கு மன ரீதியாய் பிரச்சனைகள் உள்ளதாகவும் தூக்கமின்மை, உடல்நலக் குறைவு, மகிழ்ச்சியின்மை, நண்பர்களிடமிருந்து விலகி இருத்தல் போன்ற காரணங்களால் அவதிக்குள்ளானதாகவும் கூறியுள்ளனர். இவையெல்லாமும் ஒரு மனிதனுக்கு உயர் ரத்த அழுத்தத்தினை அதிகரிக்கச் செய்யும் என்பதில் வியப்பேதும் இல்லை.

    எனவே இந்த ஆண்டு அனுசரிக்கப்படும் உயர் ரத்த அழுத்த தினத்தில் ‘உங்களது ரத்த அழுத்தத்தினை அளவிடுங்கள்;அதனை கட்டுக்குள் வையுங்கள், நீண்ட நாட்கள் வாழுங்கள்’ என்ற கருத்து வைக்கப்பட்டுள்ளது.

    ரத்த அழுத்தத்தினைக் குறைப்பதற்கான வழிகள்..
    கோபத்தினைக் கட்டுப்படுத்துதல்:

    யோகா மற்றும் தியானங்கள் மூலம் நமது கோபத்தினை கட்டுக்குள் கொண்டு வரலாம்.

    மன அழுத்தத்திலிருந்து வெளியேறும் வழிகளை பின்பற்றுதல்:

    இக்கட்டான தருணங்கள் மற்றும் பதட்டமான சூழ்நிலைகள் நமது ரத்த அழுத்தத்தினை தற்காலிகமாக உயர்த்துகின்றன. இந்த தருணங்களை எப்பொழுதும் நினைவில் வைத்திருப்பது நிரந்தரமான மன அழுத்தத்திற்கு வழி வகுக்குகின்றது. எனவே, மனதினை லேசாக வைத்திருக்கும் முறைகள் (கைகளைத் தட்டுதல், சிரித்தல், மகிழ்ச்சியாய் இருத்தல்) மூலம் அதிலிருந்து தப்பிக்கலாம்.

    சரியான உறக்கம்:

    பெரும்பாலான மக்கள், பொதுவாக இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தூக்கமின்மையால் வருகிறது. சரியான உறக்கமின்மை உடல்ரீதியாக மட்டுமல்லாது மனரீதியாகவும் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்குகிறது. 

    முறையான உடல் பருமனை பராமரித்தல்:

    வயிற்றுப் பகுதிகளில் சேரும் கொழுப்பானது இன்சுலின் அளவினைக் குறைப்பதோடு ரத்த அழுத்தத்தினை அதிகரிக்கவும் செய்கிறது. சர்க்கரை அளவினைக் குறைப்பதில் மூலம் தங்களது உடலினைப் பாதுகாக்கலாம்.

    ஆரோக்கியமாய் இருத்தல் மற்றும் முறையான உறடபயிற்சியினை மேற்கொள்ளுதல்:

    கிடைக்கப்பட்ட தரவுகளின் படி உயர் ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நபர்களில் பெரும்பாலானோர் உடல் சார்ந்த பயிற்சிகள் செய்யாதவர்களாய் உள்ளனர். உடற்பயிற்சி செய்வது தங்களது ரத்த அழுத்தத்தினை உயர்த்தும் என்ற தவறான கருத்தும் நிலவி வருகிறது. உடற்பயிற்சி செய்வது ரத்த அழுத்தத்தினை குறைப்பதோடு மட்டுமல்லாமல் உடல் பருமனை பராமரிக்கவும், உடல் தசைகள் மற்றும் இதயத்திற்கு வலிமை தருவதாகவும் உள்ளது.

    மேற்சொன்ன வழிகள் மட்டுமல்லாது, பிடித்தமான விடயங்களை செய்வதின் மூலமும், செல்லப் பிராணிகளுடன் நேரம் கழிப்பதின் மூலமும், புத்தகங்கள் படிப்பது, கதைகள் கேட்பது போன்ற செயல்களின் மூலமாகவும் நம்மையும் நம்மைச் சார்ந்து உள்ளவர்களையும் ஆரோக்கியமாய் வைத்திருக்க முடியும். 

    எவ்வளவு வழிகள் இருந்தாலும் அவற்றினை நடைமுறைப் படுத்துவது  என்பது நம்கையில் மட்டுமே உள்ளது. நமது உடலினைப் பாதுகாக்க காலவிரயம் செய்யாமல் இன்றே பயிற்சிகள் செய்வோம். உடல் என்ற சுவரினைப் பாதுகாத்து நல்ல வாழக்கை என்ற சித்திரத்தினை வரைவோம். வரும் காலத்தில் உலக ரத்த அழுத்த நாள் என்ற ஒன்றினை இல்லாமல் ஆக்குவோம்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....