Friday, March 15, 2024
மேலும்
    Homeஅறிவியல்அடுத்த பெரிய கிரகணம் எது? அது இந்தியாவில் எப்போது நிகழும்? வெளிவந்த ஆச்சர்யமான தகவல்கள்...

    அடுத்த பெரிய கிரகணம் எது? அது இந்தியாவில் எப்போது நிகழும்? வெளிவந்த ஆச்சர்யமான தகவல்கள்…

    இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று நிகழ உள்ள நிலையில், அடுத்தடுத்து தோன்ற உள்ள சந்திர கிரகணங்கள்,பெரிய கிரகணங்கள், எப்போது எப்படி இந்தியாவில் நிகழும் என்ற தகவல்களும் வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இன்று நிகழவிருக்கும் பகுதி சூரிய கிரகணம் ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகள், மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் மேற்குப் பகுதிகளிலிருந்து தெரியும். இந்தியாவில், பிற்பகலில் கிரகணம் தொடங்குகிறது.

    சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் செல்லும் போது ஒரு பகுதி சூரிய கிரகணம் ஏற்படுகிறது.பூமி ,சூரியன் ,சந்திரன்ஆகிய மூன்றும் சரியாக ஒரே நேர்கோட்டில் இல்லாமல் இருக்கும் போதுதான் சூரியனின் ஒரு பகுதி மட்டுமே மறைக்கப்பட்டு, அதன் விளைவாக பகுதி கிரகணத்தின் போது பிறை வடிவம் ஏற்படுகிறது.

    இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் கிரகண நிகழ்வைக் காண முடியும். அதன் கால அளவு நகரத்திற்கு நகரம் மாறுபடும். இருப்பினும், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவு மற்றும் இம்பால், ஐஸ்வால், இட்டாநகர் மற்றும் கோஹிமா உள்ளிட்ட சில வடகிழக்கு பகுதிகளில் உள்ள மக்கள் கிரகணத்தைப் பார்க்க முடியாது. மேலும், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகும் கிரகணம் தொடரும் என்பதால், கிரகணத்தின் முடிவை இந்தியாவிலிருந்து பார்க்க முடியாது.

    மும்பை மற்றும் டெல்லியைப் பொறுத்தவரை, கிரகணத்தின் ஆரம்பம் முதல் சூரியன் மறையும் நேரம் வரை முறையே 1 மணிநேரம் 19 நிமிடங்கள் மற்றும் 1 மணி நேரம் 13 நிமிடங்கள் ஆகும். டெல்லியில் மாலை 4:29 மணிக்கு கிரகணம் தொடங்கும் நிலையில், மும்பையில் மாலை 4:49 மணி முதல் தெரியும். சென்னையில் மாலை 5.14 மணிக்கு தொடங்கும் பகுதி கிரகணம் 31 நிமிடங்கள் நீடிக்கும். பெங்களூருவில் உள்ள மக்கள், மாலை 5:12 மணி முதல் 43 நிமிடங்களுக்கு கிரகணத்தைப் பார்க்க முடியும். கொல்கத்தாவில் மாலை 4:52 மணிக்கு பகுதி கிரகணத்தைக் காண முடியும். இது தோராயமாக 12 நிமிடங்கள் வரை நீடிக்குமாம்.

    புவி அறிவியல் ஆராய்ச்சி அமைச்சகம் சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளது. இந்தியாவின் வடமேற்கு பகுதிகளில் அதிகபட்ச கிரகணத்தின் போது சூரியனின் மறைவு தோராயமாக 40-50 சதவீதம் இருக்கும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

    இந்த ஆண்டில் ,முதல் பகுதி சூரிய கிரகணம் ஏப்ரல் 30 -ஆம் தேதி அன்று நிகழ்ந்த நிலையில் ,இப்போது இந்த இரண்டாவது பகுதி சூரிய கிரகணம் தீபாவளியின் இரண்டாவது நாளில் தோன்றுகிறது.மீண்டும் 2027-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2-ஆம் தேதி தமிழ்நாட்டில் இதுபோன்ற பகுதி சூரிய கிரகணம் தோன்றும் என்றும் கூறப்படுகிறது .

    இந்நிலையில் மீண்டும் சந்திர கிரகணம் எப்போது தோன்றும் என்ற தகவலும் கூறப்பட்டுள்ளது .

    அதன்படி , முழு சந்திர கிரகணம் வரும் நவம்பர் 8 ஆம் தேதி நிகழவுள்ளதாகவும், இந்திய நேரப்படி 2.39 மணிக்கு தொடங்கி 6.19 மணிக்கு முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்த நிகழ்வு சென்னையில் 5.38 மணிக்கு தென்படும் எனவும் ,இந்த சந்திரகிரகணத்தை காண தொலைநோக்கி போன்ற கருவிகளோ அல்லது நம் கண்களை பாதுகாத்துக்கொள்ள தனிப்பட்ட கவனமோ செலுத்த தேவையில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.மீண்டும் 2023ஆம் ஆண்டு ,அக்டோபர் மதம் 28-ஆம் தேதி தான் சந்திர கிரகணத்தை காணலாம் எனவும் கூறப்பட்டுகிறது.

    அடுத்த பெரிய கிரகணம் எது ? அது இந்தியாவில் எப்போது நிகழும் ?

    இந்தியாவில் இருந்து காணக்கூடிய அடுத்த பெரிய சூரிய கிரகணம் 2031-ஆம் ஆண்டு ,மே 21 அன்று ஏற்படும் . அது வளைய கிரகணமாக இருக்குமாம் .அப்போது தென்னிந்தியாவில் ஒரு குறுகிய நிலப்பரப்பில் இருந்து அந்த வளையத்தை காணலாம்.

    இதன் பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து, மீண்டும் 2034-ஆம் ஆண்டு ,மார்ச் 20-ஆம் தேதி அன்று, அடுத்த முழு சூரிய கிரகணம் இந்தியாவில் இருந்து தெரியும் .அது இந்தியாவில் மட்டுமின்றி இந்த முழு சூரிய கிரகணம் காஷ்மீரின் வடக்குப் பகுதியிலும் தெரிவதற்கான வாய்ப்புகள் உள்ளன .

    கிரகணத்தை பார்க்கும் போது மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இந்த கிரகணங்கள் வெறும் கண்ணுக்குத் தெரிந்தாலும், அதிலிருந்து வரும் சூரியனின் கதிர்கள் கண்ணுக்கு மிகவும் தீங்கு விளைவிப்பதாக மாறும்.

    கிரகணத்தைப் பார்ப்பதற்கான பாதுகாப்பான வழி எக்லிப்ஸ் கண்ணாடிகள் போன்ற சிறப்பு நோக்கத்திற்காக சூரிய வடிகட்டிகளைப் பயன்படுத்துவதாகும். இந்த கண்ணாடிகள் கருப்பு பாலிமர் அல்லது அலுமினிய மைலார் போன்ற பொருட்களால் ஆனது மற்றும் உங்கள் கண்களை சேதமடையாமல் பாதுகாக்க உதவும்.

    இதையும் படிங்க:ரசிகர்களிடத்தில் குதூகலத்தை ஏற்படுத்திய வாரிசு படத்தின் போஸ்டர்: கருப்பு உடையில் அட்டகாசமாக தோன்றிய விஜய்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....