ஒரே பாலின திருமணங்களுக்கு ஆதரவான மசோதாவை அமெரிக்க செனட் சபை நிறைவேற்றியுள்ளது.
அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு வழங்கப்பட்டிருந்த சட்ட அங்கீகாரம் அண்மையில் ரத்து செய்யப்படுவதாக, அந்நாட்டு உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இந்த ரத்து உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
இதனின் தாக்கமாக, ஒரே பாலினத்தவர்கள் திருமணம் செய்துகொள்ளும் சட்ட அங்கீகாரமும் ரத்து செய்யப்படுமோ என்ற பேச்சு நிலவி வந்தது. இந்நிலையில், இதனைத் தவிர்க்கும் வகையில் அமெரிக்க பிரதிநிதிகள் சபை, ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு சட்டப் பாதுகாப்பு வழங்குவதற்கான மசோதாவை கடந்த ஜூலை மாதம் நிறைவேற்றியது.
இந்நிலையில் செனட் சபையிலும் தற்போது இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா மூலம் ஒரு மாகாணத்தில் தன்பாலின திருமணம் செய்து கொண்டவர்கள் திருமணங்கள் நாட்டின் பிற மாகாணங்களிலும் செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஒரே பாலினத்தவர்கள் திருமணம் செய்துகொள்வதற்கு உச்ச நீதிமன்றம் கடந்த 2015-ஆம் ஆண்டு சட்ட அங்கீகாரம் அளித்தது குறிப்பிடத்தக்கது.
ஜல்லிக்கட்டு பார்க்க எங்களை அழைக்க மாட்டீர்களா? – நீதிபதியின் கேள்விக்கு தமிழக அரசின் பதில் என்ன?