அடுத்த 3 நாட்களுக்கு கிழக்கிலிருந்து வரும் காற்றின் மூலமாக தமிழகத்தில் மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் என்று சொல்லப்படும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் தெரிவித்துள்ளதாவது:
அடுத்த 3 நாட்களுக்கு – கிழக்கிலிருந்து அடிக்கும் காற்று தமிழகத்திற்கு மழையை கொண்டு வரும். பெரும்பாலும் மதியம் முதல் இரவு நேரமாக இருக்கும் உள் மாவட்டங்களில் மழை பெய்யும் மற்றும் இரவு முதல் காலை வரை கடற்கரை மாவட்டங்களிலும் மழைக்கான அதிக வாய்ப்பு இருக்கும். கோவை-திருப்பூர்-ஈரோடு மேற்கு தமிழக பகுதிகளிலும் அடுத்த 3 நாட்களில் மழை பெய்யும்.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் – அடுத்த 3-4 நாட்களுக்கு திடீர் திடீரென மழை பெய்யலாம். குறிப்பாக சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை நமக்கு நன்றாகத் தெரிகிறது.
பனி வந்துடுச்சு மழை வராது புராணம் ஆ தூக்கி போடுங்க..
அடுத்த 4 நாட்களுக்கு உங்களுடன் குடையை வைத்துக் கொள்ளுங்கள், குறுகிய காலத்தில் திடீரென மழை பெய்யக்கூடும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
லிப்ட் விவகாரம்; அமைச்சர்னா பணி நீக்கம்? அப்ப பொதுமக்கள்னா?