தலைநகர் தில்லியில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மதுபானம் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் இன்று முதல் வாக்குப்பதிவு நடைபெறும் 4 ஆம் தேதி வரை பாதுபானம் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவினை தில்லி மாநகராட்சி விதித்துள்ளது.
தலைநகர் தில்லியில் மாநகராட்சியின் கீழ் 250 வார்டுகள் இருக்கின்றன. இந்நிலையில் ஒரே கட்டமாக வருகிற டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி மாநகராட்சி தேர்தல் நடைபெறுகிறது. மேலும் வாக்கு எண்ணிக்கை வருகிற டிசம்பர் 7 ஆம் தேதி நடைபெறும். மேலும் அன்றைய தினமே தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்படும்.
தில்லியில் தற்போது, ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என 3 கட்சிகளிடையேயும் கடுமையான போட்டி நிலவி வருகிறது. மேலும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இதனிடையே, மாநகராட்சித் தேர்தல் நடைபெறுவதன் காரணமாக, தில்லியில் டிசம்பர் 2 முதல் 4 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு மதுபானம் விற்க தடை விதித்து கலால் வரித்துறை உத்தரவிட்டு இருக்கிறது.
அதே சமயம், வருகிற 7 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் முடிவுகள் வெளியிடப்படுவதால், அன்றைய தினமும் மதுபானத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கிளப், பார்கள் என அனைத்திற்கும் இந்தத் தடை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெத்தன போக்கினால் 8 உயிர்கள் பலியானதற்கு தமிழக முதல்வர் பொறுப்பேற்க வேண்டும்- அண்ணாமலை குற்றச்சாட்டு