புதுச்சேரியில் உள்ள அமைச்சக உதவியாளர் பணியை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதை உடனடியாக கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைச்சக ஊழியர்கள் சட்டப்பேரவை அருகே வாயிற்கூட்டம் நடத்தினர்.
புதுச்சேரியில் உள்ள அமைச்சக உதவியாளர் பணியை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதை உடனடியாக கைவிட வேண்டும், அமைச்சக உதவியாளர் பணியிடங்களை 100% பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும், அமைச்சக உதவியாளர் மற்றும் மேல்நிலை எழுத்தர் பதவிகளுக்கான காலிப் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் உடனடியாக நிரப்பிட ஆணை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைச்சக ஊழியர்களின் கூட்டு போராட்டக் குழு சார்பில் சட்டப்பேரவை அருகே கோரிக்கை விளக்க வாயிற் கூட்டம் நடைபெற்றது.
இதில் ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ரயில்வேயில் ஆட்சேர்ப்பு செயல்முறை குறித்து மனம் திறந்த ரயில்வே இயக்குநரகம்!