கூகுள் நிறுவனத்திலிருந்து சுமார் 10,000 பேர் வேலையிழக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டரை கைப்பற்றியுவடன், ட்விட்டர் 2.0 திட்டத்தை முன்வைத்து, ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் 4000-த்திற்கும் அதிகமான ஊழியர்களை பணிநீக்கம் செய்து அதிர்ச்சியளித்தார்.
இதைத்தொடர்ந்து, மெட்டா நிறுவனம் ஊழியர்கள் பணிநீக்கம் தொடர்பான முடிவுகளை எடுத்தது. அதன்படி, மெட்டாவின் வருவாய் எதிர்பார்த்ததைவிட மிகவும் குறைந்துள்ளதால், மெட்டாவின் பணியாளர்கள் எண்ணிக்கையை சுமார் 13 சதவீதம் குறைக்கவும், 11,000- க்கும் மேற்பட்ட பணியாளர்களைப் பணிநீக்கம் செய்யவும் முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
மேலும், ட்விட்டர் மற்றும் மெட்டாவைத் தொடர்ந்து அமேசான் நிறுவனமும் ஊழியர்கள் பணிநீக்கத்தை தொடங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ட்விட்டர், மெட்டா, அமேசான் வரிசையில் கூகுள் நிறுவனம் இணைந்துள்ளது. வெளிவந்துள்ள தகவலின்படி, கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களில் செயல்திறன் குறைவாக உள்ள 6 சதவிகிதம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளனர். இதன்மூலம், சுமார் 10,000 பேர் வேலை பறிபோகும் என கணிக்கப்பட்டுள்ளது.
”யோவ்…பிரஷர் போடாதயா’’ – வாரிசு பட இசையமைப்பாளர் ட்விட்டரில் கலகல பதிவு..