புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜந்தர் மந்தரில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா.சிவா தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறையை தனியார் மயமாக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில்மின்சாரத் துறையை தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்த மசோதா -2022 ஐ எதிர்த்து, தொழிற் சங்கங்கள் சார்பில் இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது.
இதில் புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான இரா.சிவா அவர்கள் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜிம், அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார், நாக.தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு மின்சார சட்ட திருத்த மசோதா -2022 ஐ எதிர்த்தும், புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊழல்.. ஊழல்.. திமுக குறித்து ஆவேசத்தில் குற்றசாட்டுகளை அடுக்கிய எடப்பாடி பழனிச்சாமி..