Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்பவர்களுகாக வருகிறது புதிய மொபைல் ஆப்: அதில் என்னென்ன வசதிகள் இருக்கிறது தெரியுமா?

    வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்பவர்களுகாக வருகிறது புதிய மொபைல் ஆப்: அதில் என்னென்ன வசதிகள் இருக்கிறது தெரியுமா?

    வெளி நாட்டிலிருந்து தமிழகம் வந்து யாரும் தமிழர்களை ஏமாற்றி வெளி நாட்டிற்க்கு அழைத்து செல்வது இல்லை, தமிழர்கள் தான் தமிழர்களை ஏமாற்றுகிறார்கள் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார்.

    தமிழகத்திலிருந்து வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்பவர்களின் விவரங்களை பதிவு செய்ய புதிய ஆப் வருகின்ற ஜனவரி மாதம் முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைக்கிறார் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று, அயலகத் தமிழர் தினம்
    தினத்தில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தங்களது பெயரினை பதிவு செய்யும் பொருட்டு, அதற்கான வசதியினை “அயலகத் தமிழர்” நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்தின் வலைதளத்தை ( https://nrtamils.tn.gov.in ) சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே. எஸ். செஞ்சி மஸ்தான் இன்று தொடங்கி வைத்தார்.

    பின்னர் இது குறித்து பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான்,

    புலம்பெயர்ந்த தமிழர்கள், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஆற்றி வரும் பங்களிப்பினை சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 12, அன்று ” அயலகத் தமிழர் தினம் ” கொண்டாடப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில், வரும் 11.01.2023 மற்றும் 12.01.2023, இரண்டு நாட்கள் “அயலகத் தமிழர் தினம்” சென்னை கலைவாணர் அரங்கில் அதனடிப்படையில் “2023” கொண்டாடப்பட உள்ளது.

    இத்தினத்தில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தங்களது பெயரினை பதிவு செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்பவர்களின் விவரங்களை பதிவு செய்ய புதிய மொபைல் ஆப் வருகின்ற ஜனவரி மாதம் முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைக்கிறார். மேலும் இது குறித்து முதல்வர் ஸ்டாலின், பல்வேறு நலத்திட்டங்கள் அடங்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார். மேலும் அதில் பதிவு செய்துவிட்டு வெளிநாடு செல்லும் பட்சத்தில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால்,தமிழக அரசு அவர்களை உடனடியாக மீட்பதற்கு சுலபமாக இருக்கும் என தெரிவித்தார்.

    இதுவரை வெளிநாட்டில் இருந்து 1674 நபர்கள் தமிழகத்திற்கு மீட்டு கொண்டுவரப்பட்டுள்ளனர். மேலும் பல்வேறு செய்திகள் வர வர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு நபர்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள். மேலும் நாளை ஒரு நபர் வெளிநாட்டிலிருந்து மீண்டு வருவதற்கான ஏற்பாட்டை துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமீபத்தில் மியான்மர் மற்றும் கம்போடியாவிலிருந்து 64 நபர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இவர்களுக்காக அரசு சார்பில் விமான செலவு செய்து, அவர்களுடைய பெற்றோரிடம் சேர்த்துள்ளோம் என தெரிவித்தார்.

    பதிவு செய்த முகவர்கள் மூலம், என்ன வேலை? என்ன சம்பளம்? என்று அறிந்து தமிழர்கள் வெளி நாட்டிற்க்கு செல்ல வேண்டும்.வெளி நாட்டிலிருந்து தமிழகம் வந்து யாரும் தமிழர்களை ஏமாற்றி வெளி நாட்டிற்க்கு அழைத்து செல்வது இல்லை, தமிழர்கள் தான் தமிழர்களை ஏமாற்றுகிறார்கள் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.

    நவ.26 முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் தேர்வு பயிற்சி; பள்ளிக்கல்வித்துறை முடிவு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....