கலிபோர்னியா மெர்செட் கவுண்டி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் கடந்த திங்கள்கிழமை 8 மாத குழந்தையுடன் சேர்த்து 4 பேர் கடத்தப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர் இளைஞர் ஜஸ்தீப் சிங் (36). இவர், மனைவி ஜஸ்லீன் கவுர், மற்றும் 8 மாத பெண் குழந்தை ஆரூஹி தேரி, உறவினரான அமன்தீப் சிங் (39) ஆகியோருடன் வசித்து வந்தார்.
கலிபோர்னியாவின் மெர்செட் கவுன்டி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் கடந்த திங்கட்கிழமையன்று இவர்கள் 4 பேரும் கடத்தப்பட்டனர். இவர்களை கடத்தியது யார், எதற்காக கடத்தப்பட்டனர் என்ற விவரங்கள் தெரியவில்லை. ஆனால், கடத்திய நபர் பயங்கர ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும், அவரை கண்டால் மக்கள் நெருங்கி செல்லாமல் தொடர்பு கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:‘கணவர் துன்புறுத்துகிறார்’ ‘கருவைக் கலைக்க நாடகம்’; சீரியல் ஜோடி திவ்யா-அர்னவ் மாறி மாறி குற்றச்சாட்டு
இந்தச் சம்பவம் தொடர்பாக, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், அந்தக் குடும்பத்தை பத்திரமாக மீட்பதற்கான முயற்சிகள் பலன் அளிக்காமல் போனது.
இதனிடையே, துப்பாக்கிமுனையில் கடத்தப்பட்ட 8 மாத குழந்தை உள்பட அமெரிக்க வாழ் இந்திய குடும்பம் நேற்று (அக்டோபர் 6) கலிபோர்னியாவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது,அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.