Sunday, March 17, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புகுடிமைப்பணிகளுக்கான தகுதி தேர்வு தேதியை அறிவித்தது மத்திய தேர்வாணையம்..!

    குடிமைப்பணிகளுக்கான தகுதி தேர்வு தேதியை அறிவித்தது மத்திய தேர்வாணையம்..!

    குடிமைப்பணிகளுக்கான (IAS, IPS, etc) 2023 ஆம் ஆண்டு முதல்நிலைத் தேர்வுக்கான இலவச பயிற்சி பெறுவதற்கான தகுதி தேர்வு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது என அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தைச் சேர்ந்த இளநிலைப் பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகளுக்கு தமிழக அரசின் சார்பில் சென்னையிலுள்ள அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்திலும், கோயம்புத்தூர், மதுரை மாவட்டங்களில் உள்ள அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணி பயிற்சி மையங்களிலும் மத்திய தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வுக்கு கட்டணமில்லாப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    விண்ணப்பதாரர்களிடமிருந்து இப்பயிற்சிக்கான நுழைவுத்தேர்விற்கு இணையதள வழியாக விண்ணப்பங்கள் கோரப்பட்டு, 7077 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 2023 – ஆம் ஆண்டு மே மாதம் 28 –ஆம் நாள் நடைபெற உள்ள மத்திய தேர்வாணையம் நடத்தும் முதல்நிலைத் தேர்வுக்கு கட்டணமில்லாப் பயிற்சி அளிப்பதற்கான நுழைவுத் தேர்வு, தமிழ்நாட்டில் உள்ள 17 மையங்களில் வரும் 13.11.2022 (ஞாயிற்றுக் கிழமை) அன்று நடைபெற உள்ளது.

    நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்த ஆர்வலர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பயிற்சி மைய இணையதளத்தின் www.civilservicecoaching.com வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தேர்வில் 150 கொள்குறி வினாக்களுக்கு விடையளிக்கப்பட வேண்டும். தேர்வு 13.11.2022 அன்று ( ஞாயிற்றுக் கிழமை ) காலை 10.30 மணி முதல் 1.00 மணி வரை இரண்டரை மணி நேரம் நடைபெறும். பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில், தேர்வு மையங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

    மேலும், அவ்வப்போது அறிவிக்கப்படும் விவரங்களை www.civilservicecoaching.com என்ற இணையதளத்திலும், தொலைபேசி எண். 044 – 24621475, அலைபேசி எண். 94442 86657 ஆகிய எண்களையும் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்கபட்டாசு ஆலை வெடிவிபத்து.! உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவித்த தமிழக அரசு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....