Wednesday, March 27, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபட்டாசு ஆலை வெடிவிபத்து.. உடல் சிதறி தொழிலாளர்கள் இறந்த பரிதாபம்.. பலி எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

    பட்டாசு ஆலை வெடிவிபத்து.. உடல் சிதறி தொழிலாளர்கள் இறந்த பரிதாபம்.. பலி எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள அழகு சிறை என்ற கிராமத்தில் அனுசியா வெள்ளையப்பணுக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

    இதில் இரண்டு கட்டிடங்களில் பணியாற்றி வந்த அடக்கம்பட்டியைச் சேர்ந்த அமாவாசை, வல்லரசு, கோபி ஆகியோரும் அழகு சிலையை சேர்ந்த பிரேமா  உள்ளிட்ட ஐந்து பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

    மேலும் அழகு சிறையைச் சேர்ந்த அங்கம்மாள், கருப்பசாமி, நாகலட்சுமி, மகாலட்சுமி, ஜெயபாண்டி, கருப்புசாமி, அன்னலட்சுமி, பாண்டியம்மா பேச்சியம்மாள் உள்ளிட்ட 13 பேர் படுகாயம் அடைந்த நிலையில் அவர்கள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    தகவல் அறிந்த விரைந்து சென்ற வசனம்பட்டி திருமங்கலம் தீயணைப்பு துறை மற்றும் திருமங்கலம் சிந்து பட்டி காவல்துறை, அங்கு சிதறி கிடந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்ட விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    இதையும் படிங்க: பட்டாசு ஆலை வெடிவிபத்து.! உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவித்த தமிழக அரசு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....