Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்சாலமன் தீவுகளில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கையால் அச்சத்தில் மக்கள்..

    சாலமன் தீவுகளில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கையால் அச்சத்தில் மக்கள்..

    சாலமன் தீவுகளில் உள்ள மலாங்கோ பகுதிக்கு தென்மேற்கில் 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    சாலமன் தீவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவுகோலில் 7.3 என்ற அளவில் பதிவாகியுள்ளது. சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் இதுவரையில் எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருட்சேதங்கள் குறித்த தகவல் வெளிவரவில்லை. 

    அதேசமயம், இந்த நிலநடுக்கத்தால், சாலமன் தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையானது பசிபிக் எச்சரிக்கை மையத்தால்  விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    மேலும், மக்கள் உடனடியாக உயரமான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். 

     முன்னதாக, நேற்று, இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் 5.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், நகரின் பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதனால், இடிபாடுகளில் சிக்கி 40-க்கும் மேற்பட்டோர் பலியாகியது குறிப்பிடத்தக்கது.

    பெண் யானை பலி; தொடர் சிகிச்சைக்குப் பின்னும் நேர்ந்த சோகம்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....