சாலமன் தீவுகளில் உள்ள மலாங்கோ பகுதிக்கு தென்மேற்கில் 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சாலமன் தீவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவுகோலில் 7.3 என்ற அளவில் பதிவாகியுள்ளது. சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் இதுவரையில் எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருட்சேதங்கள் குறித்த தகவல் வெளிவரவில்லை.
அதேசமயம், இந்த நிலநடுக்கத்தால், சாலமன் தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையானது பசிபிக் எச்சரிக்கை மையத்தால் விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், மக்கள் உடனடியாக உயரமான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
முன்னதாக, நேற்று, இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் 5.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், நகரின் பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதனால், இடிபாடுகளில் சிக்கி 40-க்கும் மேற்பட்டோர் பலியாகியது குறிப்பிடத்தக்கது.
பெண் யானை பலி; தொடர் சிகிச்சைக்குப் பின்னும் நேர்ந்த சோகம்..