Friday, March 15, 2024
மேலும்
    Homeசிறப்பு கட்டுரைநாய்கள் நன்றியுள்ளது மட்டுமல்ல அன்பும் மிகுந்தது..! அது பற்றி நாம் அறியாத ஆச்சரிய தகவல்கள்..!

    நாய்கள் நன்றியுள்ளது மட்டுமல்ல அன்பும் மிகுந்தது..! அது பற்றி நாம் அறியாத ஆச்சரிய தகவல்கள்..!

    இந்த உலகில் மனிதர்களின் நண்பன் என்று அழைக்கப்படும் ஒரு உயிரினம் என்றால் அது நாய்கள் தான. தற்போதய காலகட்டத்தில் மனிதர்களிக்கு சிறந்த செல்லப் பிராணியாகவும் நாய்கள் இருந்து வருகின்றன. தன்னை வளர்ப்பவர்கள் மீது அளவற்ற பாசத்தோடும் நன்றி விசுவாசத்தோடும் இருப்பதில் நாய்கள் மனிதர்களையே மிஞ்சிவிட்டன.

    அதனால் தான் ‘ நாய் நன்றியுள்ளது’ என்ற வார்த்தைகள் மனிதர்கள் மத்தியில் அதிக அளவில் பயன்படுத்த கூடியதாகவே மாறிவிட்டது.

    இப்படியாக மனிதர்கள் மிகவும் நேசிக்கும் உயிரினமான நாய்களை குறித்த சுவாரசியமான தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க !

    நாய் இறந்துவிட்டதா என்று எப்படி சொல்வது. ஒரு செல்லப்பிராணியின் மரணத்தை எப்படி வாழ்வது - ஒரு உளவியலாளரின் ஆலோசனை. நாய் இறந்துவிட்டது ...

    1) நாய்கள் என்பது நரிகள் இனத்தை சார்ந்தவை என்பது பலர் அறிந்த ஒன்று தான். ஆனால் நாய்கள் முதன் முதலில் 32000 ஆண்டுகளுக்கு முன்புதான் தோன்றியதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. அதேபோல் 30,000 வருடங்களுக்கு முன்பிருந்தே மனிதனும் நாயும் சிறந்த நண்பர்களாக இருக்க வாய்ப்பிருக்கிறது என ஆய்வுகள் கூறுகிறது.

    2) மனிதர்களுக்கு எப்படி ரத்த பிரிவுகள் இருக்கிறதோ அதே போல நாய்களுக்கும் 13 வகையான இரத்த வகைகள் உள்ளன.

    3) நாய்கள் அபரிவிதமான கேட்கும் சக்தியையும் நுகரும் சக்தியையும் கொண்டவை.
    நாய்களின் மோப்பசக்தி மனிதனைவிட 10,000 மடங்கு வலிமையானது. எனவே நாய்கள் தங்கள் உரிமையாளரின் வாசனையை 11 மைல் தொலைவில் இருந்தாலும் உணரும் திறனை பெற்றுள்ளது.

    The Fine Art Of Dog Walking | Lone Tree Veterinary Medical Center

    4) நாய்களுக்கு 5 அறிவு இருந்தாலும் கூட அவற்றின் ஞாபக திறனானது 250 வார்த்தைகளை கூட ஞாபகம் வைத்துக்கொண்டு அதனை புரிந்துக்கொண்டு அதற்கேற்றவாறு நடந்து கொள்ளும் அளவிற்கு திறன் பெற்றது.

    5) மனிதர்களுக்கு தனிமை என்பது மிகவும் வேதனையை தரும் அதுபோலவே நாய்களும் தனிமையில் இருந்தால் கவலைக்கு உள்ளாகும். இதன் காரணமாக நாய்கள் மனிதர்கள் இல்லையென்றால் தனிமையில் வாழ்வது கடினம்.

    6) மனிதர்களின் சுவாசம் மற்றும் வேர்வை வழியாக நாய்களால் மன அழுத்தத்தை உணர முடியும் மற்றும் அதற்க்கு ஏற்றார் போல நடந்துகொள்ளும் என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

    மேலும் மனித முகத்தில் ஏற்படும் சந்தோசம் மற்றும் கோபங்களை நாய்களால் உணரமுடியும். அதோடு மட்டுமல்லாமல் கேன்சர் போன்ற பல நோய்களை, நாய்கள் தனது மோப்ப சக்தி மூலம் அறிய கூடிய திறன் படைத்தவை.

    7) ஒரு நாயின் மூக்கு மனித கைரேகைக்கு சமமானதாகும். மனிதர்களின் கைரேகை எப்படி மாறுபடுகிறதோ… அதேபோல நாய்களின் மூக்கில் உள்ள கோடுகள் போன்ற ரேகையும் ஒவ்வொரு நாய்க்கும் மாறுபடும்.

    நாய் கவிதை | Sella pirani

    8) பொதுவாக எல்லா நாய்களும் ஒரே மாதிரியான உடல் வாகுவை கொண்டாத்திலை, சில நாய்கள் சிறிய உடலமைப்பையும் சில நாய்கள் அபரிவிதமான வளர்ந்தும் காணப்படும். ஆனால் இந்த உயரமான நாய்களுக்கு ஆயுள் குறைவு என ஆய்வுகள் கூறுகிறது.

    9) நாய்கள் சில நேரம் புற்களை சாப்பிடுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். இவ்வாறு நாய்கள் புற்களை சாப்பிட காரணம் தங்களின் உடல்நிலையை தானே அறிந்துகொண்டு செரிமான மண்டலத்தில் பாதிப்பு இருப்பதை கண்டறிந்து அதற்கு மருந்தாக புற்களை சாப்பிடும். நாய்களுக்கு எந்த ஒரு மருத்துவமும் இயல்பில் தேவையில்லை, அவை தன்னை தானே சரிசெய்யும் திறன் கொண்டவை.

    10) நாய்கள் தன்னுடைய தலையை திருப்பாமல் காதுகளை மட்டும் அசைக்கும் திறன் கொண்டவை இதனால் காதுகளை அசைக்க மட்டும் அவற்றின் உடலில் 18 தசைகளை பயன்படுத்தும் என ஆய்வுகள் கூறுகிறது.

    11) உலக அளவில் 400 பில்லியன் நாய்கள் வளர்க்கப்படுகின்றன. அதில் அமெரிக்காவில் மட்டும் ஒட்டு மொத்தமாக 75 மில்லியன் நாய்கள் செல்லப்பிராணியாக வளர்க்கப்படுகின்றன.

    நாய் வளர்ப்பும் வாஸ்து பரிகாரமும்

    12) உலக அளவில் அதிக உடல் எடை கொண்ட நாய் இனமானது மஸ்டிப் என்ற நாய்கள் தான். மஸ்டிப் நாயின் உடல் எடை ஏறக்குறைய 200 பவுண்ட் அதாவது 90 கிலோ ஆகும்.

    13) பொதுவாக நாய்களுக்கு மழை என்றால் பிடிக்காது ,ஏனென்றால் நாய்களுக்கு கேட்கும் திறன் மிக கூர்மையானது என்பதால் மழையின் போது வரும் இடி மின்னல் சத்தந்தால் அவை மிகவும் பாதிக்கபடுகின்றன. அதிகப்படியான சத்தம் நாய்களின் கேட்க்கும் திறனை பாதிப்படைய செய்கின்றன.

    6,990 Dog In Rain Stock Photos, Pictures & Royalty-Free Images - iStock

    மேலும் இது போன்ற சுவாரசியமான தகவல்களை அன்றாடம் தெரிந்துகொள்ள தினவாசல் செய்திகளோடு இணைந்திருங்க மக்களே !

    இதையும் படிங்க: நடிகர் விஜய் குரலில் வெளிவந்த ‘ரஞ்சிதமே’ பாடல்…இனி ஆட்டம்தான்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....