விண்வெளி நிலையத்திற்கு குரங்குகளை அனுப்பி, அவற்றின் வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கத்தை ஆய்வு செய்ய சீன அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விண்வெளியில் அதவாது பூஜ்ஜிய புவியீர்ப்பு சூழலில், குரங்குகள் எவ்வாறு வளர்கின்றன மற்றும் எவ்வாறு அவை இனப்பெருக்கம் செய்கின்றன போன்றவற்றை ஆய்வு செய்வதற்காக இந்த திட்டத்தை சீனா கையில் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அப்படி அனுப்பப்படும் குரங்குகள் புதிதாக நிறுவப்பட்டு ஏவப்பட்டிருக்கும் டியான்காங் என்று விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து சீன ஆராய்ச்சியாளரான ஜாங் லு, விலங்குகளை வைத்து முதற்கட்ட ஆராய்ச்சி செய்வதன் மூலமாக மனிதர்கள் விண்வெளியில் வாழத் தேவையான கூற்றுகளைத் தெரிந்துகொள்ள முடியும் என கூறியுள்ளார்.
முன்னதாக மீன்கள், நத்தைகள் போன்ற உயிரினங்களும் விண்வெளிக்கு அனுப்பப்பட்டிருந்தன.
அதேபோல், சோவியத் யூனியன் காலத்தில் இனப்பெருக்க நோக்கத்திற்காக எலிகள் 18 நாட்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டிருந்தன. இந்த ஆராய்ச்சியில் விண்வெளியிலிருந்து பூமிக்கு கொண்டுவரப்பட்ட உயிரினங்களுக்கு இடையே இனப்பெருக்கம் ஏற்படவில்லை என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
இதையும் படிங்க: உலக நாயகன் கமல்ஹாசனின் அரிய புகைப்பட தொகுப்பு ..! பர்த்டே ஸ்பெஷல்!
இந்நிலையில், தற்போது குரங்குகளை அனுப்ப சீன அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
அதே சமயம் குரங்குகளை விண்வெளிக்கு அனுப்புவது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே, 1948 ஆம் ஆண்டு அமெரிக்க விமானப்படை ஆல்பர்ட் என்ற ரீசஸ் என்ற குரங்கை வி-2 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவியது. இருப்பினும், ஆல்பர்ட் விண்வெளியை அடையும் முன்பே மூச்சு திணறி இறந்தது.
இதற்கு அடுத்த ஆண்டு மீண்டும், ஆல்பர்ட் 2 என்ற குரங்கு விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. பிறகு விண்வெளிக்கு சென்ற முதல் குரங்கு என்ற பெருமையை ஆல்பர்ட் 2 பெற்றது. இதைத்தொடர்ந்து, 1959 ஆம் ஆண்டு மிஸ் பக்கீர் என்ற குரங்கு ஜூபிட்டர் என்ற ராக்கெட்டில் விண்வெளிக்கு ஏவப்பட்டது.
விண்வெளியில் புவியீர்ப்பு விசை இல்லாத காரணத்தால், விண்வெளியில் உள்ள உயிர்களிடையே விரைப்பைகள் மற்றும் அதன் பிற இனப்பெருக்க உறுப்புகளை சேதப்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
நிலவு அல்லது செவ்வாய் கிரகத்தை சுற்றி நீண்ட காலமாக மனிதர்களை குடியேற்றுவதற்கு உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன. அதனால், இதுபோன்றதொரு சோதனைகள் அவசியம் தான் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: “தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில்”.. சென்னையில் இருந்து தொடங்கியது சோதனை ஓட்டம்..!