Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ஆஸ்கர் அழைப்பை ஏற்ற சூர்யா; பெருமிதத்தில் தென்னிந்திய திரையுலகம்!

    ஆஸ்கர் அழைப்பை ஏற்ற சூர்யா; பெருமிதத்தில் தென்னிந்திய திரையுலகம்!

    தமிழ்த் திரைப்பட உலகை உலகளவில் கவனம் பெற செய்திருக்கிறார், நடிகர் சூர்யா. 

    தமிழ்த் திரைப்பட உலகில் தவிர்க்க முடியாத நடிகர்களுள் மிக முக்கியமானவர் சூர்யா. நேருக்கு நேர் என்ற திரைப்படத்தில் முதன்முதலாக கதாநாயகனாக சூர்யா அறிமுகமானார். தொடர்ந்து தனது உழைப்பால் தமிழ்த் திரைப்பட உலகில் உச்ச நட்சத்திரம் என்ற நிலைக்கு வந்துள்ளார். 

    சூரரைப் போற்று, ஜெய் பீம் போன்ற திரைப்படங்களின் மூலம் உலகளவில் மாபெரும் வரவேற்பை சூர்யா பெற்றார். இந்நிலையில், ஆஸ்கர் விருதை வழங்கும் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் எனும் குழுவில் கலை மற்றும் அறிவியல் பிரிவின் கீழ் உறுப்பினராக இணையுமாறு  ஆஸ்கர் விருது குழுவானது சூர்யாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

    இந்த அழைப்பை தான் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த சூர்யா, இது குறித்து தனது ட்விட்டர் பதிவில் தனது நன்றிகளை கூறியுள்ளார். அதில், அழைப்பு விடுத்தமைக்கு ஆஸ்கர் விருது குழவிற்கு நன்றி என்றும், இந்த அழைப்பை மனமுவந்து ஏற்றுக்கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், என்னைத் தொடர்ந்து வாழ்த்தி வரும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி என்றும் கூறியுள்ளார். 

    இதனைத் தொடர்ந்து பல பிரபலங்களும் நடிகர் சூர்யாவுக்கு வாழ்த்து தெரவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உலகநாயகன் கமல்ஹாசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

    ‘முதல் நீ முடிவும் நீ’ என அவன் பாட ; அவள் அழுதாள்…பார்த்த நாமும்தான்! – சிறப்பு பார்வை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....