Sunday, March 17, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புதமிழக காவல்துறையில் புதிய காலிப்பணியிடங்கள்!

    தமிழக காவல்துறையில் புதிய காலிப்பணியிடங்கள்!

    தமிழக காவல் துறையில் காலியாகவுள்ள ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை, இரண்டாம் நிலை சிறைக் காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

    இந்த அறிவிப்பின்படி, ஒட்டுமொத்தமாக 3,552 இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க www.tnsurb.tn.gov.in என்ற இணையதளத்தை அனுகும்படி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது.

    இத்தேர்வுகளுக்கான விண்ணப்பமானது ஆகஸ்ட் 15-ம் தேதி வரையில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்கள் குறித்து விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் தமிழ்நாடு சீருடை தேர்வு குழுமம் சில முன்னேற்பாடுகளை செய்துள்ளது. 

    அதன்படி, சந்தேகங்களை தீர்க்க 044-40016200, 044-28413658 ஆகிய தொலைபேசி எண்களையும், 94990 08445, 91762 43899 ஆகிய கைப்பேசி எண்களையும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும், சந்தேகங்களை நேரில் தீர்ப்பதற்காக அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், மாநகர காவல் ஆணையர் அலுவலகம்,  சீருடை தேர்வு குழும அலுலகம் ஆகிய இடங்களில் உதவி மையங்கள் ஜூலை மாதம் 7-ம் தேதி முதல், வாரத்தின் 7 நாள்களும் செயல்படும் .

    ரோலக்ஸ் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்த கமல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....