இன்று நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் இலங்கை அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றினர்.
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், போராட்டங்களும் தீவிரமடைந்துள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் மக்கள் அரசை எதிர்த்து போராடி வருகின்றனர். இவர்களின் போராட்டத்தின் விளைவாகவே பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். இதையடுத்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலகவேண்டுமென போராட்டங்கள் தொடர்ந்து வலுத்து வருகின்றன.
இந்நிலையில் இன்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக மாபெரும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டதின்போது அதிபர் மாளிகை போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டது.
போராட்டத்தின் மத்தியில், அதிபர் மாளிகையில் இருந்த கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து வெளியேறினார். அதிபர் மாளிகை முற்றுகைக்கு காவல்துறை ஆதரவாக செயல்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
அதிபர் மாளிகையை முழுவதுமாக போராட்டக்காரர்கள் கைப்பற்றினர். தற்போது இலங்கை அதிபர் மாளிகை போரட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
இலங்கையில் இருந்து தப்பி ஓடினாரா அதிபர் கோட்டபய ராஜபக்சே?