Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇந்தியாவில் உயரும் கொரோனா தொற்று- 43 பேர் பலி

    இந்தியாவில் உயரும் கொரோனா தொற்று- 43 பேர் பலி

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,840 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், 43 பேர் உயிரிழந்துள்ளனர். 

    இதுதொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: 

    சனிக்கிழமை காலை காலை 8 மணி நிலவரப்படி, மேலும் புதிதாக 18,840 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,36,04,394 ஆக அதிகரித்துள்ளது. 

    இந்தியாவில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,25,028 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 43 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இதுவரை தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,25,386 ஆக அதிகரித்துள்ளது. 

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 16,104 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால், இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,29,53,980 ஆக அதிகரித்துள்ளது. 

    கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 12,26,795 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 1,98,65,36,288 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

    இவ்வாறு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....