Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்புதுச்சேரிதுணை நிலை ஆளுநர் அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாடிய சௌந்தரராஜன்!

    துணை நிலை ஆளுநர் அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாடிய சௌந்தரராஜன்!

    புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆயுத பூஜை கொண்டாடியுள்ளார். 

    ஆயுதபூஜை ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கிய விழாக்களில் ஒன்றாகும். 

    இவ்விழாவில், முதல் 3 நாட்கள் துர்க்கையையும், அடுத்த 3 நாட்கள் லட்சுமியையும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதியையும் வழிபாடு நடத்தப்படும். இறுதிநாளில் சரஸ்வதியை வழிபாடு செய்வதின் காரணமாக, அந்த நாளை ‘சரஸ்வதி பூஜை’ என்ற பெயரில்கொண்டாடுகிறோம். ஆயுதபூஜை பண்டிகை நாளை அக்டோபர் 4 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 

    இந்நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது. 

    இதில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அலுவலகத்தில் உள்ள சாமி உருவ படங்களுக்கு தீபாராதனைக் காட்டி வழிபாடு செய்தார். 

    இதுகுறித்து, தமிழிசை சௌந்தரராஜன் தனது புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: பொன்னியின் செல்வன் கதாபாத்திர பெயர் கொண்டவரா நீங்கள்? அப்போ உங்களுக்கு பிரியாணி 1 வாரத்திற்கு இலவசம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....