Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இலங்கைசிங்கப்பூரில் கோத்தபய ராஜபக்சேவின் விசா காலம் நீட்டிப்பு

    சிங்கப்பூரில் கோத்தபய ராஜபக்சேவின் விசா காலம் நீட்டிப்பு

    இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் விசா காலத்தை மேலும் 14 நாள்கள் நீட்டித்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

    இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், ஆளும் அரசுக்கு எதிராக இலங்கை மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், கடந்த ஜூலை 9ம் தேதி இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், அதிபர் மாளிகையை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனிடையே, அதிபர் மாளிகையை விட்டு கோத்தபய ராஜபக்சே வெளியேறினார்.

    இதைத் தொடர்ந்து, இலங்கையில் அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசு அமைக்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, கோத்தபய ராஜபக்சே தனது அதிபர் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார்.

    அதனை தொடர்ந்து, கோத்தபய ராஜபக்சே கடந்த ஜூலை 15-ம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதற்கிடையில், கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுக்குத் தப்பிச் சென்றுவிட்டதாக தகவல்கள் வெளிவந்தது. பின்னர், அங்கிருந்து கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்குத் தப்பிச் சென்றதாக கூறப்பட்டது. 

    இந்நிலையில், சிங்கப்பூரில் செய்தியாளர்களுக்கு கடந்த வியாழக்கிழமை (ஜூலை 28) பேட்டியளித்த குடியேற்ற ஆணைய அதிகாரிகளிடம், கோத்தபய சிங்கப்பூரில் தங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    இக்கேள்விக்கு அதிகாரிகள் கூறியதாவது :  

    கோத்தபய ராஜபக்சே தனிப்பட்ட பயணமாக கடந்த ஜூலை 14-ம் தேதி சிங்கப்பூருக்கு வந்தார். ஆகவே, அவருக்கு குறுகிய கால பயண அனுமதியாக 14 நாள்கள் சிங்கப்பூரில் தங்கியிருக்க அனுமதி அளிக்கப்பட்டது.

    மேலும், பொதுவாக சிங்கப்பூரை சுற்றிப் பார்க்க வருபவர்களுக்கு 30 நாள்கள் தங்கியிருக்க அனுமதி அளிக்கப்படுகிறது. கால நீட்டிப்பு தேவைப்படுவோர் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். கோரிக்கையின் அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்.

    இவ்வாறாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் தங்கியிருக்க மேலும் 14 நாள்கள் விசா காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை தங்க அனுமதி கிடைத்துள்ளது. 

    இலங்கையின் புதிய பிரதமர் தினேஷ் குணவர்தன

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....