இலங்கை வவுனியா பகுதியில் தமிழக அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இலங்கையில் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். மக்களை விலைவாசி உயர்வு வாட்டி வதைத்து வருகிறது. அரசியலிலும் பெரும் குழப்பமான சூழ்நிலை காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஒரு சில மாதங்களுக்கு முன்பு, தமிழக அரசு சார்பில், உணவு பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அங்கிருக்கும் இலங்கைத் தமிழர்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு சார்பில் இந்த உதவிப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிலையில், இலங்கை வவுனியா பகுதியில், மதுரங்கர் கிராமத்தின் கிராம சங்க கட்டிடத்தில் தமிழக அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. இதனை அப்பகுதி கிராம மக்கள் கண்டுபிடித்தனர்.
அப்படி கண்டுபிடிக்கப்பட்ட அரசி மூட்டைகள், வண்டுகள் ஏறி எதற்கும் தவாத நிலையில் இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனிடையே இந்தச் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
அடையாறு பஸ் டிப்போ, வணிக வளாகமா மாறுகிறதா? – மெட்ரோ அளித்த பதில்