Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இலங்கைஇலங்கையின் புதிய பிரதமர் தினேஷ் குணவர்தன

    இலங்கையின் புதிய பிரதமர் தினேஷ் குணவர்தன

    இலங்கையின் புதிய பிரதமராக பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த தினேஷ் குணவர்தன இன்று (ஜூலை 22) பொறுப்பேற்றுக் கொண்டார். 

    இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், ஆளும் அரசுக்கு எதிராக இலங்கை மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

    இந்நிலையில், கடந்த 9-ம் தேதி இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், அதிபர் மாளிகையை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனிடையே, அதிபர் மாளிகையை விட்டு கோத்தபய ராஜபக்சே வெளியேறினார்.

    இதையடுத்து இலங்கையில் அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசு அமைக்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, கோத்தபய ராஜபக்சே தனது அதிபர் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார்.

    அதனை தொடர்ந்து, கோத்தபய ராஜபக்சே கடந்த ஜூலை 15-ம் தேதி தனது அதிபர் பதவியை ராஜிநாமா செய்தார். இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே இலங்கையின் இடைக்கால அதிபராக ஜூலை 15-ம் தேதி அன்றே பதவியேற்றார்.

    அதன்பின்னர், கடந்த ஜூலை 16-ம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கூடியது. இக்கூட்டமானது இலங்கையின் நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கோத்தபய ராஜபக்சேவின் ராஜிநாமா கடிதம் வாசிக்கப்பட்டது. 

    மேலும், இலங்கை அதிபர் தேர்தல் ஜூலை 20-ம் தேதி நடைபெறும் என நாடாளுமன்ற செயலாளர் தம்மிக தசநாயக அறிவித்தார். அதன்பின்னர், அன்றைய கூட்டம் நிறைவுபெற்றது.

    இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த ஜூலை 20-ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில்  ரணில் விக்ரமசிங்கே 134 வாக்குகள் பெற்று வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

    இதனை தொடர்ந்து, கடந்த ஜூலை 21-ம் தேதி இலங்கையின் தலைமை நீதிபதி ஜயந்த ஜெயசூரிய முன்னிலையில் ரணில் விக்கிரமசிங்கே, புதிய அதிபராக பதவியேற்றுக் கொண்டார்.

    இதையடுத்து, ஜூலை 22-ம் தேதியாகிய இன்று இலங்கையின் புதிய பிரதமராக 73 வயதுள்ள தினேஷ் குணவர்தன பதவியேற்றுக் கொண்டார். இலங்கை அதிபர்  ரணில் விக்ரமசிங்கே, தினேஷ் குணவர்தன-வுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். 

    தினேஷ் குணவர்தன பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மக்களின் எழுச்சியை அடக்க இலங்கை ராணுவத்துக்கு அதிகாரம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....