அர்ஜெண்டினாவின் உலக அழகியும், பியூர்டோ ரிகோ நாட்டின் உலக அழகியும் ஒருவரையொருவர் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
அர்ஜெண்டினாவைச் சேர்ந்த உலக அழகி மரியான வரேலா. இவருக்கு வயது 26 ஆகிறது. பியூர்டோ ரிகோ நாட்டின் உலக அழகி ஃபேபியோலா வேலண்டின், இவருக்கு வயது 22. இவர்கள் இருவரும் கடந்த 2020-ஆம் ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச உலக அழகிப் போட்டியில் ஒருவரையொருவர் முதல் முறையாக சந்தித்துக்கொண்டனர்.
அந்த உலக அழகிப்போட்டியில், இரு அழகிகளும் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடித்தனர். இதைத்தொடர்ந்து, மரியான வரேலாவும், ஃபேபியோலா வேலண்டினும் சமூக வலைதளத்தில் நண்பர்களாக மாறியுள்ளனர். இந்த நட்பு காலப்போக்கில் காதலாக மாறியுள்ளது. இருவரும் ஒருவரையொருவர் காதலிக்கத் தொடங்கியுள்ளனர்.
காதலில் விழுந்தப்பின் டேட்டிங் சென்றுள்ளனர். ஆனால், இவர்கள் காதல் குறித்து யாருக்கும் எந்தவித தகவலும் தெரியாமல் இருந்துவந்துள்ளது. இந்நிலையில், சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக மரியான வரேலாவும், ஃபேபியோலா வேலண்டினும் ஒருவரையொருவர் திருமணம் செய்துகொண்டனர். அவர்கள் திருமணம் செய்துகொண்டதை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்தனர். இதைக் கண்டோர் ஆச்சரியமடைந்தனர்.
View this post on Instagram
மேலும், தற்போது இருவரும் தேனிலவுக்கு சென்றுள்ளதாகவும், அதைச் சார்ந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: உருவாகிறதா ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் இரண்டாம் பாகம்? – இயக்குநர் சொன்ன பதில்!