ஸ்பெயின், உக்ரைன், அயர்லாந்து உள்ளிட்ட 21 நாடுகளில் 30 சட்டவிரோத காவல் நிலையங்களை சீனா அமைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
சீனா தன்னை உலகின் வல்லரசு நாடாக காட்டிக்கொள்ள பல்வேறு வேலைகளை செய்து வருவதாக தகவல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், பிரான்ஸ், கனடா, ஸ்பெயின், உக்ரைன், அயர்லாந்த் உள்ளிட்ட 21 நாடுகளில் 30 சட்டவிரோத காவல் நிலையங்களை அமைத்து சீனா கண்காணித்து வருவதாக புலனாய்வு நாளிதழான ரிபோர்டிகா தெரிவித்துள்ளது.
மேலும், உலகின் வல்லரசாக தன்னைக் காட்டிக்கொள்ள உலகின் பல்வேறு நாடுகளிலும் இதுபோன்ற செயல்களை சீனா முன்னெடுத்துள்ளது என்றும் அந்த நாளேடில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதிரியான செயல்களால், சீனா தனது சட்டவிரோத காவல் நிலையங்கள் மூலம் பல்வேறு நாடுகளில் நடக்கும் தேர்தலில் தனது ஆதிக்கத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. சீனாவின் இந்தச் செயல், மனித உரிமை ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:5ஜி சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி! இனி என்னென்ன மாற்றங்கள் வரலாம்?