சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் 61 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் மிகவும் வசதியான போக்குவரத்து சேவையை வழங்கி வருகிறது.
இந்நிலையில், கடந்த ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 2,47,98,227 பயணிகள் பயணித்தனர். ஜூலை மாதம் 53 லட்சம் பேர் பயணம் செய்த நிலையில், ஆகஸ்ட் மாதம் 56.6 லட்சமாக அதிகரித்தது. அதற்கடுத்த மாதான செப்டம்பரில், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்தது.
கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் 61,12,906 பயணிகள் பயணம் மேற்கொண்டனர். இந்த எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்தை காட்டிலும் மிக அதிகம். அதாவது, 4.46 லட்சம் பேர் கூடுதலாக பயணம் செய்திருக்கிறார்கள்.
செப்டம்பர் மாதத்தில் மட்டும் கியூஆர் (QR Code) குறியீடு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 4, 98, 351 பயணிகள் பயணம் செய்தனர். பயண அட்டை பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 38, 23, 810 பயணிகள் பயணம் செய்தனர்.
இதுவரை அதிகபட்சமாக நேற்று ஒருநாள் மற்றும் 2,46,404 பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டனர்.
Press Release -01-10-2022 pic.twitter.com/IUOtT97DLv
— Chennai Metro Rail (@cmrlofficial) October 1, 2022
இதையும் படிங்க: கட்டு கட்டுமாக சிக்கிய கள்ள நோட்டுகள்; போட்டி போட்டு எடுத்த பொதுமக்கள்