ராமேஸ்வரம் அருகே அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக தனுஷ்கோடி திகழ்ந்து வருகிறது. இந்த தலம் சுற்றுலாப் பயணிகள் வந்து குவியும் இடமாக விளங்கி வருகிறது.
இதையும் படிங்க: வடகிழக்கு பருவமழை: மாநிலங்களுக்கு விடுக்கப்பட்ட புயல் எச்சரிக்கை-அரசு செய்யப்போவது என்ன ?
இந்நிலையில், தனுஷ்கோடி பகுதியில் இன்று காலையிலிருந்து கடல்சீற்றம் கடுமையாக காணப்படுகிறது. பல அடி தூரத்துக்கு கடல் அலை எழும்பி வருவதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக் கருதி, அரிச்சல் முனை பகுதிக்குச் செல்ல பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனால், தொடர் விடுமுறை காரணமாக தனுஷ்கோடி சென்றவர்களும், செல்லத் திட்டமிட்டவர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: பூமிக்கடியில் பெருங்கடல் இருப்பதை உறுதி செய்த விஞ்ஞானிகள் -மேற்பரப்பில் உள்ள கடல்களை விட 3 மடங்கு பெரியதாம் ..!