வடபழனி முருகன் கோயிலில் ‘சக்தி கொலு’ விழாவின் ஐந்தாம் நாளான நேற்று அம்பாள் கெஜலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
சென்னை, வடபழனி முருகன் கோயிலில் நவராத்திரி திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்தாண்டு நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு வடபழனி கோயிலில், ‘சக்தி கொலு’ என்ற பெயரில் பிரமாண்டமாக கொலு அமைக்கப்பட்டுள்ளது.
நவராத்திரி திருவிழாவின் ஒரு பகுதியாக ஒவ்வொரு நாளும் மாலையில் 108 பேர் கொண்ட குழுவால் லலிதா சஹஸ்ரநாம பாராயணம் செய்யப்படுகிறது.
இதையும் படிங்க:பூமிக்கடியில் பெருங்கடல் இருப்பதை உறுதி செய்த விஞ்ஞானிகள் -மேற்பரப்பில் உள்ள கடல்களை விட 3 மடங்கு பெரியதாம் ..!
கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு, வடபழனி முருகன் கோயிலில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.
இந்நிலையில், சக்தி கொலு விழாவின் 5 ஆம் நாளான நேற்று (செப்டம்பர் 30) அம்பாள் கெஜலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
முன்னதாக காலை, மாலை என இரு வேளைகளிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதன்பிறகு, பக்தர்களின் கொலு பாட்டு அரங்கேறியது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, சக்தி கொலு விழாவைக் கண்டு களித்தனர்.
இதையும் படிங்க:காதலியை திருமணம் செய்து வைத்த மனைவி; தொல்லை தாங்காமல் இருவருக்கும் ‘டேக்கா’ கொடுத்த கணவர்