பொன்னியின் செல்வன் திரைப்படம் தொடர்பாக நன்றி தெரிவித்து உணர்ச்சிபூர்வமான விடீயோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் திரைப்படம் உருவாகியுள்ள திரைப்படம்தான், பொன்னியின் செல்வன்.
இரு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் தயாரித்துள்ளது.
தொடக்கத்தில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் கதைமாந்தர்களை அவ்வபோது போஸ்டராக இணையதளத்தில் படக்குழு வெளியிட்டு வந்தது. அதையடுத்து, வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் கவனத்தைப் பெற்றன.
இதையும் படிங்க: சிவாஜியின் 95-வது பிறந்தநாள் பல்வேறு தலைவர்கள் மணிமண்டபத்தில் மரியாதை!
இதன் தொடர்ந்து, சென்னை நேரு மைதானத்தில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற அச்சமயத்தில் இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. பொன்னியின் செல்வன் பிரபலங்கள் செய்த புரோமஷனும் நன்றாகவே மக்களிடன் சென்று சேர்ந்தது.
மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளிவந்துள்ளது. பல திரையரங்குகளில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் காட்சிகளுக்கு முன்பாக செண்டை மேளங்களுடனும், ரசிகர்களின் ஆடல்பாடலும் இடம்பெற்றிருந்தது. மேலும், திரைப்படம் வெளியானதிலிருந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும், பொன்னியின் செல்வன் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ. 25 முதல் 27 கோடி வரையில் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதன்படி, இந்த வருடத்தில் வெளிவந்த திரைப்படங்களில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்துள்ள திரைப்படங்களில் மூன்றாவது இடத்தை பொன்னியின் செல்வன் பிடித்துள்ளது. முதல் இரண்டு இடங்களில் முறையே பீஸ்ட் மற்றும் வலிமை திரைப்படம் உள்ளது. மேலும், விடுமுறைக்காலம் என்பதால் பொன்னியின் செல்வன் மாபெரும் வசூல் சாதனைகளை நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அன்பு இதயங்களுக்கு என் இதய நன்றி. #PonniyanSelvan #ManiRatnam @LycaProductions @arrahman @actor_jayamravi @Karthi_Offl @trishtrashers #AishwaryaRaiBachchan pic.twitter.com/YxJczs44gh
— Aditha Karikalan (@chiyaan) October 1, 2022
இந்நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்த விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த விடீயோவில் ரசிகர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும், படக்குழுவினருக்கும் உணர்ச்சிபூர்வமாக நன்றி தெரிவித்துள்ளார்.
தற்போது, ரசிகர்களின் மிகுந்த ஆரவாரத்துடன் திரைப்படத்தை பார்த்து வருகின்றனர். கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள திரைப்படமே பொன்னியின் செல்வன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பொன்னியின் செல்வன் படவெளியீடு சமூக வலைத்தளங்களில் வைரலாகும் மீம்கள்