Saturday, March 16, 2024
மேலும்
    Homeஅறிவியல்பூமிக்கடியில் பெருங்கடல் இருப்பதை உறுதி செய்த விஞ்ஞானிகள் -மேற்பரப்பில் உள்ள கடல்களை விட 3 மடங்கு...

    பூமிக்கடியில் பெருங்கடல் இருப்பதை உறுதி செய்த விஞ்ஞானிகள் -மேற்பரப்பில் உள்ள கடல்களை விட 3 மடங்கு பெரியதாம் ..!

    சர்வதேச ஆய்வின்படி நாம் வாழும் பூமியின் மேற்பரப்பில் உள்ள அனைத்து கடல்களின் அளவை விட மூன்று மடங்கு நீர் தேக்கத்தை கொண்ட பெருங்கடல் ஒன்று பூமிக்கடியில் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

    நமது பூமியின் மேற்பரப்பிலிருந்து கீழே சுமார் 75 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள பகுதி புவித்தகடு என்று அழைக்கப்படுகிறது. அதற்கும் கீழ் 2900 கிலோ மீட்டர் கீழே உள்ள பகுதி, மிகக் கடினமான மேண்டில் பகுதி என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் ஜெர்மனியின் ஃபிராங்க்பர்ட்டில் உள்ள கோதே பல்கலைக்கழகத்தில் உள்ள புவி அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, ராமன் ஸ்பெக்ட்ரோஸ்கோபி மற்றும் எஃப்டிஐஆர் ஸ்பெக்ட்ரோமெட்ரி உள்ளிட்ட நுட்பங்களைப் பயன்படுத்தி பூமியின் மேற்பரப்பில் இருந்து 660 மீட்டர் ஆழத்தில் உருவான அரிய வைரத்தை ஆய்வு செய்தது.

    இதையும் படிங்க:நவீன வசதிகளுடன் உருவாகும் மெரினா வர்த்தக மையம் – என்னென்னெ வரப்போகிறது தெரியுமா?

    அப்போது நடத்தப்பட்ட அந்த ஆய்வில் பூமியின் மேல் மற்றும் கீழ் மேன்டில் இடையே உள்ள மாற்றம் மண்டலத்தில் “கணிசமான அளவு தண்ணீர்” இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நீண்ட காலமாக ஒரு கோட்பாடாக மட்டுமே நினைக்கப்பட்டு வந்த ஒன்றை இந்த ஆய்வின் மூலம் இப்போது உறுதிப்படுத்தியுள்ளனர். இதன் பொருள் நமது கிரகத்தின் நீர் சுழற்சியில், பூமியின் உட்புறம் அடங்கும்.

    இந்த கனிம மாற்றங்கள் மேன்டில் உள்ள பாறையின் இயக்கங்களை பெரிதும் தடுக்கின்றன என்று பிராங்பேர்ட்டில் உள்ள கோதே பல்கலைக்கழகத்தில் உள்ள புவி அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஃபிராங்க் பிரெங்கர் விளக்குகிறார்.

    இதுகுறித்து பேராசிரியர் ஃபிராங்க் பிரெங்கர் கூறுகையில், பூமியின் மேலடுக்கில் உள்ள பாறைகளின் இயக்கம் கனிம மாற்றங்களால் பெரிதும் தடைபடுகிறது என்று விளக்கினார். மேலும் “தட்டுக்குட்பட்ட தட்டுகள் முழு மாற்ற மண்டலத்தையும் உடைப்பதில் பெரும்பாலும் சிரமப்படுகின்றன. எனவே ஐரோப்பாவிற்கு அடியில் இந்த மண்டலத்தில் அத்தகைய தட்டுகளின் முழு மயானமும் உள்ளது.

    அதேபோல் பூமிக்கடியில் மேண்டில் பகுதியில் உள்ள மாறுதல் மண்டலத்தில் உள்ள அடர்த்தியான தாதுக்கள் வாட்ஸ்லேயிட் மற்றும் ரிங்வுடைட் போன்றவை அதிக கொள்ளளவு நீரை சேகரித்து வைக்க முடியும். பூமிக்கடியில் மேண்டில் பகுதியில் உள்ள மாறுதல் மண்டலத்தில் நிலப்பரப்பில் உள்ள அனைத்து பெருங்கடல்களின் நீரின் அளவை விடவும் 6 மடங்கு அதிக கொள்ளளவு உள்ள நீரை சேகரித்து வைக்க முடியும். எனவே எல்லை அடுக்கு தண்ணீரை சேமிப்பதற்கான மிகப்பெரிய திறனைக் கொண்டுள்ளது என்பதை நாங்கள் அறிவோம் என்று கூறியுள்ளார் .

    இதையும் படிங்க:உலகின் முதல் மின்சார பயணிகள் விமானம்; சிட்டாக பறந்து சாதனை!

    இப்போது, ​​ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் இருந்து அரியவகை வைரம் பற்றிய ஆய்வு அதை நிரூபித்துள்ளது. மாற்றம் மண்டலம் மற்றும் கீழ் மேன்டில் இடையே உள்ள எல்லைகளில் வைரம் உருவாக்கப்பட்டது. இது 660 கிலோமீட்டர் ஆழத்தில் உள்ளது, இது மிக ஆழமான தோற்றம் கொண்ட வைரங்களில் கூட அரிதாக உள்ளது. அதன் பகுப்பாய்வு மூலம், விஞ்ஞானிகள் பல ரிங்வுடைட் சேர்த்தல்களைக் கண்டறிந்தனர்.

    இதன் பொருள் இது அதிக நீர் உள்ளடக்கத்தை வெளிப்படுத்தியது. இது உண்மையில் முன்மொழியப்பட்ட பகுதியிலிருந்து வந்ததா என்பதை இருமுறை சரிபார்க்க, அவர்கள் அதன் வேதியியல் கலவையை சரிபார்த்து, உலகெங்கிலும் உள்ள பாசால்ட்களில் காணப்படும் மேன்டில் பாறையின் துண்டுகளுக்கு எதிராக அதை ஆய்வு செய்து உறுதிப்படுத்தினர்.

    மேலும், பூமிக்கடியில் வெறும் வறண்ட பகுதி மட்டுமே உள்ளது என்பது உண்மையல்ல, நீர் சத்து நிரம்பிய நீர்ப்பாறைகளாக அப்பகுதியில் இருக்கக்கூடும். அதற்கு ஏற்றாற்போல் விஞ்ஞானிகள் இந்த ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டால் பூமிக்குள் கடல் இருக்கலாம் என்ற பிரெஞ்சு விஞ்ஞானியும் நாவலாசிரியருமான ஜூல்ஸ் வெர்னின் கருத்தை நிச்சயமாக நிரூபிக்க முடியும் என்று கூறினார் பேராசிரியர் ஃபிராங்க் ப்ரெங்கர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை “Like” செய்யுங்கள், “Follow” பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....