Friday, March 15, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புவங்கி வேலைதான் வேண்டும்னு விடாப்பிடியா இருக்கீங்களா...இதோ உங்களுக்கான வாய்ப்பு!

    வங்கி வேலைதான் வேண்டும்னு விடாப்பிடியா இருக்கீங்களா…இதோ உங்களுக்கான வாய்ப்பு!

    இந்தியாவில் முக்கிய வங்கியாக திகழ்ந்து வரும் வங்கிகளில் முதன்மையாக கருதப்படும் வங்கிதான், பாரத ஸ்டேட் வங்கி. இந்த வங்கியில் தற்போது 1422 சிபிஓ பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது.

    Circle Based Officer (CBO) எனப்படும் இந்த பணிக்காக தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு https://sbi.co.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர்-7 ஆகும். 

    மேலும், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா, தெலங்கானா, ராஜஸ்தான், மேற்கு வங்காளம், சிக்கிம், மகாராஷ்டிரம், கோவா, அசாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா போன்ற பகுதிகள் பணியிடங்களாக தெரிவிக்கப்பட்டுள்ளன. 

    இப்பணியிடங்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.36,000 – 63,840 அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 30.09.2022 தேதியின்படி 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும் என்றும், இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசுவிதிகளின் படி வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழங்களில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள விண்ணப்பிக்க தகுதியானவர்கள். பொறியியல், பட்டய கணக்காளர், மருத்துவம் போன்ற துறைகளில் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆன்லைன் எழுத்துத் தேர்வு, ஸ்கிரீனிங் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இந்த காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பக் கட்டணமாக பிரிவினரும் ரூ.750 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க:ஏலத்திற்கு வரும் சார்லஸ் – டயானா திருமண கேக்; 41 ஆண்டுகள் ஆனாலும் மவுசு குறையல!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....